Intentar ORO - Gratis
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்
Dinamani Salem
|October 05, 2025
அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.
அவர் மீண்டும் மதுரைக் கல்லூரி மூலமாக பட்டப் படிப்பை முடித்து, திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஹானர்ஸ் படித்தார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலையில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
1952-இல் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்து, 1961-இல் கரூர் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய மென்மையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவருடைய பணியைப் பாராட்டி இந்திய ஆட்சிப் பணியை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கியது.
1967 ஜூலை 1-இல் எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு கையில் விலங்கிட்டு நிறுத்தப்பட்டாரோ, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாடிப் படிகளில் ஏறி, ஆட்சியர் அறையில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவர்தான் ‘காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்' என்ற வள்ளுவர் வாக்குக்கு வாழும் உதாரணமாயிருக்கும் லட்சுமிகாந்தன் பாரதி.
2025 அக்டோபர் 4-இல் தன்னுடைய 99 வயதை முடித்து, அக். 5-இல் தன்னுடைய நூறாவது அகவையை தொடங்குகிறார் இவர். இவருக்கு 2024-ஆம் ஆண்டில் தினமணி சார்பில் 'பாரதியார் விருது' வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 'பாரதி' என்ற பட்டப் பெயருடன் விளங்கும் குடும்பங்கள் இரண்டு. இவ்விரு குடும்பத்தின் மூல புருஷர்களுக்கும் 'பாரதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தவர் அன்றைய எட்டயபுரம் மகாராஜா. ஒருவர் சுப்ரமணிய பாரதி, மற்றொருவர் லட்சுமிகாந்தன் பாரதியின் தாய்வழித் தாத்தா சோமசுந்தர பாரதி. இருவருமே எட்டயபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். நான் சட்டப் பேரவை உறுப்பினராக அன்றைய அமைச்சர் ராஜாராமுடன் குற்றாலத்திலிருந்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்தபோது, 'பாரதி நகர்’ என்ற பெயரைப் பார்த்தவுடன், "இது யார் பெயர் தெரியுமா?" என்கிறத் தகவலைச் சொன்னார் அமைச்சர்.
Esta historia es de la edición October 05, 2025 de Dinamani Salem.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Salem
Dinamani Salem
கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து
12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
1 min
June 23, 2026
Dinamani Salem
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Salem
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Salem
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Salem
காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Dinamani Salem
நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான விடியோ போலியானது: என்டிஏ
நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ போலியானது என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
June 23, 2026
Dinamani Salem
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Salem
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Salem
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Salem
முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்
தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.
1 mins
June 23, 2026
Translate
Change font size
