Intentar ORO - Gratis
அரிசித் தவிடு எண்ணெய் உடலுக்கு ஏற்றதா?
Dinamani Salem
|August 24, 2025
உடலுக்கு ஏற்றதா?
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் பலவாக இருந்தாலும், தற்போது பிரபலமாக இருப்பது அரிசித் தவிடு எண்ணெய்தான். குறைவான கொழுப்பு இருக்கிறது. நீரிழிவு, இதயநோய் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது” என்கிறார் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் ஊட்டச்சத்து, உணவியல் பேராசிரியர் ப.வண்டார்குழலி.
அவரிடம் பேசியபோது: “அரிசித் தவிடு எண்ணெய்யை உடலுக்கு நன்மை தரும் எண்ணெயாகும். உடலுக்குத் தேவையான நுண்ணூட்டங்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி குரூப் வைட்டமின்கள் போன்றவையும், புரதச் சத்தும் மிகுந்துள்ளன.
சமையல் எண்ணெய் பொருத்தவரையில், மணிலா எண்ணெய், கடுகு எண்ணெய் (3:1), நல்லெண்ணெய், மணிலா எண்ணெய் (1:1) என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு எண்ணெய்யில் இருக்கும் நன்மைகள் கிடைப்பதுடன் சில தீமைகளும் தவிர்க்கப்படும்.
அரிசி, அதன் மேலிருக்கும் உமி, அதற்குப் பிறகு இருக்கும் தவிடு, அதற்கடுத்து இருக்கும் விதையின் பிரதான பாகம், அதனுள் இருக்கும் உள்கரு என்று நான்கு முக்கிய பாகங்களைக் கொண்டது 'அரிசித் தவிடு'. வெளிப்புறத்தில் இருக்கும் கடினமான, சாப்பிட முடியாத பாகம் தான் உமி. அதை நீக்கியவுடன் விதைப் பகுதியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தவிடு என்னும் மெல்லிய உறையும் நவீன அரிசி ஆலைகளில் நீக்கப்படுகிறது. இந்தத் தவிடில்தான் அரிசித் தவிடு எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
அரிசியைப் புழுங்க வைக்கும்போது, நிறம் மாறி, மணம், சுவை இழந்து மென்மையாகிவிடுவதால், பிரட், நொறுக்குகள், குக்கீஸ், பிஸ்கட் போன்றவை செய்வதற்கும் இந்தத் தவிடு பயன்படுத்தப்படுகிறது. நார்ச்சத்து இருப்பதால், இந்த வகையான நொறுக்குத் தின்பண்டங்கள் நீரிழிவு, உடல் எடை குறைப்பு, இதய நோயாளிகளுக்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.
Esta historia es de la edición August 24, 2025 de Dinamani Salem.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Salem
Dinamani Salem
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Salem
மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Salem
கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size