Intentar ORO - Gratis
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
Dinamani Puducherry
|November 24, 2025
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் 91% பெண்கள் அடங்குவர். அனைத்துப் பாலியல் குற்றங்களிலும் 7-இல் 6 வன்கொடுமைகளுக்கு பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தவர்களே காரணமாக உள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு இரண்டு நிமிஷத்துக்கும் யாரோ ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்.
இந்தியா முழுவதும் கடந்த 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் தொகுப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021-ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் வழக்குகள் 4,415-ஆக இருந்த நிலையில், அது 2022-ஆம் ஆண்டில் 4,906ஆக அதிகரித்திருப்பதாக கூறுகிறது. பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 5,026 பெண் குழந்தைகளில் 3,621 பேர் பாலியல் வன்கொடுமைக்கும், 1,008 பேர் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், 367 சிறுமிகள் பாலியல் சார்ந்த தொடர் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில் 8,501-ஆக இருந்த நிலையில், அது 2022ஆம் ஆண்டு 9,207ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.12% அளவுக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 8.31% அளவுக்கும் அதிகரித்துள்ளன.
Esta historia es de la edición November 24, 2025 de Dinamani Puducherry.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Puducherry
Dinamani Puducherry
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Puducherry
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா
பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
1 min
December 03, 2025
Dinamani Puducherry
மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு
மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது
1 min
December 03, 2025
Dinamani Puducherry
பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Puducherry
மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்
'மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரத மரான ஜவாஹர்லால் நேரு விரும் பினார்; ஆனால் அவரது இத்திட் டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அனும திக்கவில்லை’ என்று மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
2 mins
December 03, 2025
Dinamani Puducherry
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Puducherry
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Puducherry
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Puducherry
சிவகங்கை பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
சிவகங்கை அருகே திங் கள்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத் தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங் கல் தெரிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Puducherry
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Listen
Translate
Change font size
