Facebook Pixel விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? | Dinamani Puducherry - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

Dinamani Puducherry

|

September 01, 2025

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

- சவுக்கு சங்கர், ஊடகவியலாளர்.

பெரியார் ஈ.வெ.ரா. உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, 1949-இல் திமுகவை தொடங்கினார். 1957-இல் முதல் தேர்தலைச் சந்தித்த திமுக, 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962-இல் 50 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தபோது, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, சமுக்த சோஷலிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தே 168 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சில மாதங்களிலேயே திண்டுகல் மக்களவைக்கான இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பெற்றார் என்றால் அதன் பின்னணியில் பெரும் வரலாறு இருக்கிறது. அவர் அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே அரசியலில் இருந்தார். 1953-இல் திமுகவில் இணைந்தார். 1967 பேரவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். எம்எல்சி, எம்எல்ஏ, திமுக பொருளாளர் என படிப்படியாக கட்சியில் உயர்ந்தார். அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 1972-இல் அதிமுகவை தொடங்கி முதல் தேர்தலிலேயே சாதனை படைத்தார்.

விஜய்க்கு இதுபோன்ற அரசியல் அனுபவம் இல்லை. திரைத்துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது அனுபவமின்மையை அரசியல் நடவடிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. கட்சி தொடங்கிய இந்த ஒன்றரை ஆண்டுகளில் விக்கிரவாண்டி மாநாட்டையும், மதுரை மாநாட்டையும் தவிர அவர் வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளைக்கூட திமுக முன்னெடுக்கவில்லை.

MÁS HISTORIAS DE Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

நாயக்கர் கால நெற்களஞ்சியம்

வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Puducherry

இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Puducherry

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Puducherry

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size