Intentar ORO - Gratis
அணு ஆயுதம் என்னும் அச்சுறுத்தல்
Dinamani Puducherry
|August 18, 2025
அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போராக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. அணுகுண்டுகளால் ஜப்பானில் ஏற்பட்ட விளைவுகளை இரண்டாம் உலகப் போர் இன்னும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால், உலக நாடுகள் அணுகுண்டு தயாரிப்பதை ஐ.நா.வும், வல்லரசு நாடுகளும் எதிர்த்து வருகின்றன.
உலகம் எங்கும் ஆங்காங்கு பல நாடுகளில் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. போரின் இறுதியில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடக்கிறது. அது முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடிவில்லாத இந்தப் போரும், பேச்சுவார்த்தையும் எங்கே போய் முடியுமோ என்ற கவலையும் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது.
உலக வல்லரசான அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்தப் போர்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகவே போர்களைத் தூண்டி விடுகின்றன. இப்போது போர்கள் எல்லாமே ஏவுகணை களின் போர்களாகவே மாறி விட்டன.
கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கினைத் தாக்கி அழிக்கின்றன. பல காலமாகப் பாடுபட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் தகர்க்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அழிப்பது எப்போதும் எளிய செயலாகும். அந்த நகரங்களைக் கட்டி எழுப்புவதற்கு எத்தனை காலமாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதற்குப் பின்னால் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எடுத்துக் காட்டியே அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன. அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடாக இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 'குரங்கு கையில் கொள்ளியைக் கொடுத்த கதையே' நினைவுக்கு வருகிறது.
"எதிர்காலத்தில் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்; பாகிஸ்தானைத் தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்..." என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் பேசியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசீம் முனீருக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்து அளித்தார். இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமெரிக்காவுக்கு அவர் அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டார்.
Esta historia es de la edición August 18, 2025 de Dinamani Puducherry.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Puducherry
Dinamani Puducherry
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Puducherry
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை
1 min
September 01, 2025
Dinamani Puducherry
'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது
2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்துவைக்கிறார்
1 min
September 01, 2025
Dinamani Puducherry
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Dinamani Puducherry
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Puducherry
சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி
பாஜக தேசியத் தலைவர் நட்டா
1 min
September 01, 2025
Translate
Change font size