Intentar ORO - Gratis
புதிய தலைமை மலர்கிறது!
Dinamani New Delhi
|October 22, 2025
காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.
தங்கள் சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் எல்லையற்ற நம்பிக்கை கொண்டு செயல்படும் மாமனிதர்கள். இவர்கள் மகாத்மா காந்தியை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு, காந்தியச் செயல்பாடுகளில் வெற்றி பெற்ற மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களின் அனுபவங்களையும் பெற்று, களத்தில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வை நோக்கிச் செயல்பட முனைந்தவர்கள். இவர்கள் தங்களை நிறுவனமாக்கிக் கொள்ளாமல் செயல்களுக்கான இயக்கமாக தங்களை வடிவமைத்துக் கொண்டு செயல்படும் இளைஞர்கள்.
காந்தியச் செயல்பாடுகள் தேக்கமடைவதுபோல் இன்று ஓர் உரையாடல் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்களின் வரவு காந்தியச் செயல்பாடுகளுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது. இவர்கள் உண்மையான காந்திய தியாக தீபங்களைத் தேடிக் கண்டறிந்து அவர்கள் செய்த பணிகளைப் புதுப்பித்து, செயல்களில் கரைந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்புலம் என்பது இவர்களின் சமூகச் செயல்பாடுகள் மட்டும்தான்.
இவர்கள் தங்கள் செயல்களின் மூலம் தவிர்க்கப்பட முடியாத மனிதர்களாக, சமூகம் தேடும் மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இவர்களின் தனிச் சிறப்பு. சென் புத்தமதத் துறவிகளைப்போல் சாதாரண மனிதர்களாகவே தங்களைக் காட்டிக் கொண்டு, மற்றவர்கள் செய்ய இயலாத செயல்களையெல்லாம் எடுத்துச் செயல்பட்டு வெற்றிபெறச் செய்கிறார்கள். அந்நியப்பட்டுப்போன மக்களுக்கு இவர்களின் செயல்களெல்லாம் இறைச் செயலாகவே தோன்றுகின்றன. இவர்களின் தனித்துவம் மக்களுடன் இருப்பது, இணைந்து செயல்படுவது.
இவர்களில் சிலர் காந்திய வேர்களைத் தொடர்ந்து நாடிச் சென்று, அதைத்தேடிக் கண்டறிந்து அதற்கு புத்துயிர் ஊட்டி புது வடிவம் தந்து செயல்படுகின்றனர். இவற்றைப் பார்த்த நமக்கு காந்தியத்தை செயல்களால் உயர்த்தும் உயர்சக்தி இவர்களிடம் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இவர்களின் செயலைப் பார்க்கும்போது இவர்களைத்தான் விவேகானந்தர் தேடினாரோ, இவர்கள்தான் மகாத்மா காந்தி தயார் செய்ய எண்ணிய நிர்மாண ஊழியர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
Esta historia es de la edición October 22, 2025 de Dinamani New Delhi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani New Delhi
Dinamani New Delhi
விவசாயிகளுக்கு ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு
விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani New Delhi
சோனியா, ராகுல் மீது புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு
நேஷனல் ஹெரால்ட் வழக்கு
2 mins
December 01, 2025
Dinamani New Delhi
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani New Delhi
இலங்கை மழை வெள்ள பாதிப்பு: மீட்புப் பணியில் இந்திய விமானப் படை
உயிரிழப்பு 334-ஆக உயர்வு
1 mins
December 01, 2025
Dinamani New Delhi
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
எஸ்ஐஆர் பணி நீட்டிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்கு நீட்டித்திருப்பது திமுகவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று திமுக சட்டத் துறைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

