Intentar ORO - Gratis
பாரதியியலில் சாதித்ததும் இனி சாதிக்க வேண்டியதும்!
Dinamani Nagapattinam
|October 19, 2025
மகாகவி பாரதியார் குறித்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவரது அரிய படைப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு அளித்தவர், பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன். 91 வயதாகும் இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியியல் ஆய்வாளராக இடைவிடாது இயங்கி வருகிறார். இவரது பாரதி பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு 'பாரதி விருது' வழங்கிப் பெருமைப்படுத்தியது. தினமணி நாளிதழ் 2018-இல் மகாகவி பாரதி விருது வழங்கிச் சிறப்பித்தது. மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
பாரதியியல் ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன் இதுவரை சாதித்தது குறித்தும், சாதிக்க வேண்டியது குறித்தும் மனம் விட்டுப் பேசுகிறார்.
1960-ஆம் ஆண்டில், அதாவது என் 26-ஆவது வயதில் பாரதி நூல் பதிப்புப் பணிகளை மேற்கொண்டேன். எனக்கு இப்போது 91 வயது. சுமார் 60 ஆண்டுகள் பாரதி நூல்கள் பதிப்புப் பணிகளை மட்டுமே என் வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வருகிறேன். பாரதி பக்தி ஒன்றே எனக்கு வழிகாட்டியாக அமைந்தது.
ஆரம்ப காலத்தில் பாரதி தொகுப்பு நூல்களை மட்டுமே பிரசுரம் செய்து வந்தேன். பின்னர் பாரதியின் விஸ்வரூப தரிசனத்தை நன்கு புலப்படுத்திக் காட்டும் மகாகவி பாரதி வரலாற்று நூலையும், பின்னர் காலவரிசையிலான தொகுதிகளையும் வெளியிட்டேன்.
என்னுள் பாரதி சக்தியைப் பாய்ச்சிய முதல் நூல், எழுத்தாளர் கல்கி எழுதிய 'பாரதி பிறந்தார்' என்ற நூல்தான். 1952-ஆம் ஆண்டில், அதாவது, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் ஏதேச்சையாகபாரதி எனக்குப் பரிச்சயமானார். அதுவே பின்னர் என் வாழ்க்கைப் பணியாக மாறிவிடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 1952-ஆம் ஆண்டிலிருந்து பாரதி நூல்கள் படிப்பாளனாக இருந்த நான், 1962-ஆம் ஆண்டிலேயே பாரதி நூல்களை வெளியிடும் பதிப்பாளனாக ஆனேன்.
1962-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரதியாரின் 81-ஆவது பிறந்தநாள் விழாவின்போது, அந்த மகாகவியின் மகிமைகளை விளக்கிக் காட்டும் நூல் ஒன்றை வெளியிட விரும்பினேன். அந்த வகையில், அறிஞர் பெருமக்கள் பாரதி பற்றி எழுதிய அரிய கட்டுரைகளைத் தொகுத்து 'தமிழகம் தந்த மகாகவி' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். அந்த நூல் பல அறிஞர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது. அது தந்த உற்சாகத்தில் இனி பாரதி நூல்களை மட்டுமே பதிப்பது என்று உறுதி பூண்டேன்.
Esta historia es de la edición October 19, 2025 de Dinamani Nagapattinam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்த வழக்கு: முக்கிய நபர் கைது
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
1 min
June 12, 2026
Dinamani Nagapattinam
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Nagapattinam
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Nagapattinam
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Nagapattinam
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Nagapattinam
ஆஸி. யுடனான ஒருநாள் தொடர்: வரலாறு படைத்தது வங்கதேசம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
June 12, 2026
Dinamani Nagapattinam
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Nagapattinam
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Nagapattinam
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Nagapattinam
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Listen
Translate
Change font size

