Intentar ORO - Gratis

அரிய பண்புகளின் தலைமகன்

Dinamani Karur

|

July 15, 2025

காமராஜ் அதிகார ஆணவமோ, பதவி மோகமோ இல்லாத எளிய, இனிய மனிதர்; தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஓயாது உழைத்தவர்; ஆகவேதான், மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார்.

- முனைவர் அ.பிச்சை

வொஹர்லால் நேரு 1964-இல் நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டம். அப்போது, மேலைநாட்டுப் பத்திரிகையாளர்களில் சிலர், நேருவுக்குப் பிறகு இந்தியா சிதறுண்டு போகும் என்றார்கள்; ஆனால், வேறு சிலர் இந்தியா சிதறாமல் நிற்கலாம் என்றாலும், அங்கு ஜனநாயகம் நீடிக்க வாய்ப்புகள் குறைவு என்று ஆரூடம் கூறினர்.

அதைப் பொய்யாக்கி, இந்தியாவில் ஒற்றுமையையும், ஸ்திரத்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் உறுதி செய்ததில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர்களில், முதன்மையானவராகக் குறிப்பிடப்பட வேண்டியவர் கு.காமராஜ். ஆனால், இன்று அவர் தமிழ்நாட்டைத் தவிர்த்து- தேசத்தின் பிற பகுதிகளில் மறக்கடிக்கப்பட்ட தலைவராக ஆகிவிட்டாரே! என்று கவலையுடன் பதிவு செய்திருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜ் பதவி வகிக்கிறார். அது சமயம் நேரு தன் வீட்டில் நலிந்த நிலையில், ஓய்வு எடுத்து வருகிறார். அவரை காமராஜ் சந்திக்கிறார்.

‘ஐயா! எனக்கு உங்கள் அறிவுரை தேவை. உங்களுக்கு முழுமையான ஓய்வு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி நீங்கள் ஓய்வில் இருந்தால், உங்கள் பொறுப்பை நாங்கள் யாரிடம் கொடுப்பது? எனக் கேட்கிறார் காமராஜ். அதற்கு நேரு; ‘சாஸ்திரியை வைத்துப் பாருங்கள்’ என்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின்னால், ‘இந்திரா காந்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று காமராஜ் கேட்க, அதற்கு நேரு தந்த பதில்; ‘இப்போது வேண்டாம்’ என்பதாகும்.

அதன் பிறகு, சென்னை திரும்பிய காமராஜ், தன் நம்பிக்கைக்குரிய சகா வான சட்டப்பேரவைத் தலைவர் செல்ல பாண்டியனிடம் இந்த உரையாடலைப் பகிர்ந்து கொள்கிறார்.

அத்துடன் சேர்த்து, காமராஜ் பேரவைத் தலைவரிடம், “பாண்டியன்! இந்திரா காந்தியின் பெயரை நான் சொன்னவுடன், தலைவர் நேரு, ‘இப்போது வேண்டாம்’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘வேண்டாம்’ என்று சொல்லவில்லை! ஆகவே, நம் தலைவர் மனதில் இந்திரா காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது எனது ஊகம்’ என்றாராம்.

இவ்வாறு தன் தலைவனின் ஆழ்மனத்தில் கிடந்த எண்ணத்தை, தானே கேட்டறிந்து, அப்படியே முதலில் சாஸ்திரி, அடுத்து இந்திரா என்று நிறைவேற்றிக் காட்டிய தூய்மையான தேசத் தொண்டர் காமராஜ்.

MÁS HISTORIAS DE Dinamani Karur

Dinamani Karur

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

பந்தன் வங்கி கடனளிப்பு 10% உயர்வு

தனியார் துறை வங்கியான பந்தன் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Karur

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Karur

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Karur

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Karur

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size