Intentar ORO - Gratis
எங்கு போய் முட்டிக்கொள்வது?
Dinamani Kanyakumari
|February 28, 2025
இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம்.
கல்வி என்பது முற்றிலும் மாநில அரசின் பொறுப்பிலேயே இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் அது இணை அதிகாரப் பட்டியலுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டது. அது குறித்து தமிழ்நாட்டை ஆண்டவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முணுமுணுக்கக் கூட இல்லை. அதற்குப் பிறகு கங்கையிலே பெருவெள்ளம் ஓடி வடிந்தும் விட்டது.
இந்தியையும் கற்க வேண்டும்; அதுவும் கட்டாயம் என்னும் நிலை தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டு, அதற்குப் பேரெதிர்ப்பு கிளம்பி, அது இங்கே கிடப்பில் போடப்பட்டது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. கல்வி வழியாகத்தானே இந்தி ஊடுருவ முடியும்?
ஆயினும் இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்னும் மைய அரசின் நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை. ஆகவே அது இந்தி பேசாத மக்களின் தலைமீது என்றென்றும் தொங்கிக்கொண்டிருக்கிற வாளாகவே இருந்து வருகிறது.
இந்தியா ஒன்றாக இருந்த நாடில்லை. அதைத் தன் துப்பாக்கி முனையில் இணைத்தான் வெள்ளைக்காரன். அப்போதும் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் அயலாகவே இருந்தனர். ஆங்கிலக் கல்வியைப் புகுத்தினான் வெள்ளைக்காரன். இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். அதுதான் வெள்ளையனின் அதிகாரத்தைத் தாண்டி காஷ்மீரையும் குமரி முனையையும் மனக்கலப்பாலும் கருத்துக் கலப்பாலும் ஒருமைப்படுத்தியது.
எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம். அதுதான் இந்தியாவைச் சிதறாமல் காக்கும்.
வெள்ளைக்காரன் போகும்போது இந்தியா சிதறிவிடுமோ என்று காந்தி அஞ்சினார்.
இந்தியா சிதறாமல் காத்தது காந்தியின் மொழிவழித் தேசியக் கொள்கைதான். இதை 1920-இலேயே நடைமுறைப்படுத்தி விட்டார் காந்தி. தமிழ்நாடு காங்கிரசு, வங்காளக் காங்கிரசு என்று பிரித்துக் காட்டி, நாளைய இந்தியா இதுதான் என்று அடையாளப்படுத்தி, நாட்டைச் சிதறவிடாமல் காத்தவர் காந்திதான்.
Esta historia es de la edición February 28, 2025 de Dinamani Kanyakumari.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Kanyakumari
தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு
வட கொரிய அதிபர் உத்தரவு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி அழைப்பு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Kanyakumari
பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது
எஸ்.பி.வேலுமணி தரப்பு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Translate
Change font size

