Intentar ORO - Gratis
அரிய பண்புகளின் தலைமகன்
Dinamani Dindigul & Theni
|July 15, 2025
காமராஜ் அதிகார ஆணவமோ, பதவி மோகமோ இல்லாத எளிய, இனிய மனிதர்; தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஓயாது உழைத்தவர்; ஆகவேதான், மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார்.
வொஹர்லால் நேரு 1964-இல் நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டம். அப்போது, மேலைநாட்டுப் பத்திரிகையாளர்களில் சிலர், நேருவுக்குப் பிறகு இந்தியா சிதறுண்டு போகும் என்றார்கள்; ஆனால், வேறு சிலர் இந்தியா சிதறாமல் நிற்கலாம் என்றாலும், அங்கு ஜனநாயகம் நீடிக்க வாய்ப்புகள் குறைவு என்று ஆரூடம் கூறினர்.
அதைப் பொய்யாக்கி, இந்தியாவில் ஒற்றுமையையும், ஸ்திரத்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் உறுதி செய்ததில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர்களில், முதன்மையானவராகக் குறிப்பிடப்பட வேண்டியவர் கு.காமராஜ். ஆனால், இன்று அவர் தமிழ்நாட்டைத் தவிர்த்து- தேசத்தின் பிற பகுதிகளில் மறக்கடிக்கப்பட்ட தலைவராக ஆகிவிட்டாரே! என்று கவலையுடன் பதிவு செய்திருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜ் பதவி வகிக்கிறார். அது சமயம் நேரு தன் வீட்டில் நலிந்த நிலையில், ஓய்வு எடுத்து வருகிறார். அவரை காமராஜ் சந்திக்கிறார்.
‘ஐயா! எனக்கு உங்கள் அறிவுரை தேவை. உங்களுக்கு முழுமையான ஓய்வு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி நீங்கள் ஓய்வில் இருந்தால், உங்கள் பொறுப்பை நாங்கள் யாரிடம் கொடுப்பது? எனக் கேட்கிறார் காமராஜ். அதற்கு நேரு; ‘சாஸ்திரியை வைத்துப் பாருங்கள்’ என்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின்னால், ‘இந்திரா காந்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று காமராஜ் கேட்க, அதற்கு நேரு தந்த பதில்; ‘இப்போது வேண்டாம்’ என்பதாகும்.
அதன் பிறகு, சென்னை திரும்பிய காமராஜ், தன் நம்பிக்கைக்குரிய சகா வான சட்டப்பேரவைத் தலைவர் செல்ல பாண்டியனிடம் இந்த உரையாடலைப் பகிர்ந்து கொள்கிறார்.
அத்துடன் சேர்த்து, காமராஜ் பேரவைத் தலைவரிடம், “பாண்டியன்! இந்திரா காந்தியின் பெயரை நான் சொன்னவுடன், தலைவர் நேரு, ‘இப்போது வேண்டாம்’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘வேண்டாம்’ என்று சொல்லவில்லை! ஆகவே, நம் தலைவர் மனதில் இந்திரா காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது எனது ஊகம்’ என்றாராம்.
இவ்வாறு தன் தலைவனின் ஆழ்மனத்தில் கிடந்த எண்ணத்தை, தானே கேட்டறிந்து, அப்படியே முதலில் சாஸ்திரி, அடுத்து இந்திரா என்று நிறைவேற்றிக் காட்டிய தூய்மையான தேசத் தொண்டர் காமராஜ்.
Esta historia es de la edición July 15, 2025 de Dinamani Dindigul & Theni.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Translate
Change font size

