Facebook Pixel ஆடம்பரங்கள் அவசியமா? | Dinamani Dharmapuri - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

ஆடம்பரங்கள் அவசியமா?

Dinamani Dharmapuri

|

December 09, 2025

அமெரிக்காவில் வசிக்கும் என் தோழி, தன் மகனின் திருமண புகைப்படத்தை எனக்கு அனுப்பிவிட்டு, விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

- முனைவர் இரா. கற்பகம்

ஆடம்பரங்கள் அவசியமா?

மணமக்கள், அவர் தம் பெற்றோர் ஆகிய ஆறு பேர் மட்டும் பங்கேற்க, மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் மணவிழாவை நடத்தியிருந்தார்கள்! நம் நாட்டில் இது சாத்தியமா? தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் நம் இல்லத் திருமண விழாக்களை நாம் எவ்வளவு ஆடம்பரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்?

நம் நாட்டில் உழவர் சந்தை, மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தைபோல, 'கல்யாணச் சந்தை' என்ற ஒன்று இருக்கிறதே! இன்றைய திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; 'கல்யாணச் சந்தையில்' தான் நிச்சயிக்கப்படுகின்றன! இங்கு நடக்கும் வேடிக்கைகளையும், விசித்திரங்களையும், கொடுக்கல் வாங்கல்களையும், லாப நஷ்டக் கணக்குகளையும் பார்க்கலாம்.

ஆண்-பெண் சமத்துவமெல்லாம் பேச்சளவில் மட்டும்தான். எல்லா நிலைகளிலும் மணமகன் வீட்டார் மேல்தட்டிலும், மணமகள் வீட்டார் கீழ்த்தட்டிலும்தான் இருக்கிறார்கள். 'கல்யாணச் சந்தையின்' ஆரம்பம் பெண் பார்க்கும் படலம். இப்போதெல்லாம் யாரும் அநாகரிகமாகப் பெண்ணைப் பாடச் சொல்லிக் கேட்பதில்லை. அதற்குப் பதிலாக மணமகன் வீட்டார் பத்துப் பதினைந்து பேருக்கு நடுவில் பெண்ணைக் கொலு பொம்மை போல அலங்கரித்து உட்காரச் செய்து, சமைக்கத் தெரியுமா, அலுவலகத்தில் வேலை நேரம் என்ன, ஊதியம் எவ்வளவு என்று 'நாகரிகமாக' விசாரிக்கிறார்கள்.

அடுத்தது சடங்கு சம்பிரதாயங்கள், முகூர்த்த நாள், நேரம், மணப்பெண் உடுத்த வேண்டிய மண விழா ஆடையின் நிறம், அழைப்பிதழ் என்று எல்லாவற்றையுமே மணமகன் வீட்டார்தான் நிர்ணயிக்கிறார்கள். என் உறவினர் ஒருவரின் மகளுக்குத் திருமணம் பேசினார்கள். அந்தப் பெண் மிகவும் சிவந்த நிறம் உள்ளவர். அவருக்குச் சிவப்பு நிறத்தில் புடவை அணிந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம். ஆனால், மணமகனின் சகோதரிகள், 'மஞ்சள் நிறப் புடவைதான் அணிய வேண்டும்; அதுதான் எங்கள் வழக்கம்', என்று அடித்துப் பேசினார்கள். ‘சிவந்த நிறப் பெண்ணுக்கு சிவப்பு, கருநீலம், கரும்பச்சை போன்ற வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும்; வெளிர் நிறமான மஞ்சள் எடுப்பாக இராது' என்று அந்தப் பெண்ணின் பெற்றோர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் பிடிவாதத்தை விடவில்லை.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 30, 2026

Dinamani Dharmapuri

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Dharmapuri

பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

மௌனம் காக்கும் சி.வி.சண்முகம்

ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதென அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பும் முடிவெடுத்துள்ள நிலையில், அதிருப்தியில் இருந்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி சி.வி. சண்முகம் எம்எல்ஏவின் மௌனம் அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.

time to read

1 min

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size