அன்பின் வழியது உயிர்நிலை
Dinamani Dharmapuri
|October 30, 2025
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
வெறுப்பு சார்ந்த எண்ணங்கள் மனதின் ஆழத்திலே நீறுபூத்த நெருப்பைப் போல் வேரூன்றி வீற்றிருக்கும். இதனால், பெரும் கேடுகள் விளையக்கூடும். வெறுப்பு உள்ள இடத்தில் அன்பு இருப்பதில்லை. ஒருவரிடம் ஒருவர் எத்தகைய பரிவும் இன்றி உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து போர் நடைபெறுகிறது. அதன் விளைவுகளையும் உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது. ஆங்காங்கே எல்லைத் தகராறுகள் வெடிக்கின்றன. உலகில் அமைதி நிலவ வேண்டும் எனில், மனிதனின் மனத்திலே அன்பு சுரக்க வேண்டும்.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்னும் உணர்வானது இயல்பாகவே அமைந்துள்ளது. அன்பு இல்லையெனில் வாழ்க்கைத் தொடர் என்பது அற்று விடும். அன்புதான் உடல் நலம், மனநலன் போன்றவற்றின் மேன்மையான நிலைக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அன்பிற்குப் பரந்த, விரிந்த ஆற்றல் உள்ளது. அன்பு அலைகளை இயற்கையிடம் பாயும்படிச் செய்தால், அதன் பயனாக உலகெங்கிலும் நல்ல விளைவுகளைத் தோற்றுவிக்க முடியும்.
கன்னடக் கவிஞர் குவெம்பு, 'செல்வம் உள்ளது, கல்வி உள்ளது விஞ்ஞானமும் கையில் உள்ளது சினம் மிக்க போர்க்களத்தின் செந்தழல் மருள் கொண்டு திரண்டு எழுந்த நிலை' என்று தன் கவிதையில் தற்காலச் சூழலை உள்ளவாறு வடித்துள்ளார்.
Esta historia es de la edición October 30, 2025 de Dinamani Dharmapuri.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Dharmapuri
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Dharmapuri
துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை
கூடலூரை அடுத்துள்ள வடவயல் கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
1 min
January 01, 2026
Listen
Translate
Change font size
