The Perfect Holiday Gift Gift Now

மாணவ மாணிக்கங்கள்!

Dinamani Coimbatore

|

July 04, 2025

நாம் யாருக்கும் பாரமாக வாழாமல் உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்பட வேண்டும். இன்று நம் நாட்டில் அனைத்தும் இருந்தும் சுயநல சிந்தனைதான் நம்மை சிதிலமடைய வைக்கிறது. அதை மாற்ற நம் சிந்தனையை உயர்வாக்கிச் செயல்படுவதன் மூலம்தான் எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க முடியும்.

- க.பழனித்துரை

பள்ளி மாணவர்களுக்கான ஒரு பயிற்சி முகாம். நடைபெற்ற இடம் மாற்றுத் திறனாளிகளை தன்மானமிக்க திறனாளிகளாக உருவாக்கும் திருக்கோயிலாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அருகே அமைந்துள்ள ஒரு தவச்சாலை.

மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வளிக்கும் இரண்டு மாமனிதர்களால் நடத்தப்படும் வேள்வி. அதைச் சென்று பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த இரண்டு மாமனிதர்களும் வாழும் தெய்வங்கள் என்று வணங்க வைக்கும் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள். மற்றவர் துணையின்றி எந்தச் செயலையும் செய்ய இயலாத இரண்டு மனிதர்களும் கர்மயோகிகளாகச் செயல்பட்டு நம்பிக்கை ஒளியை அனைவருக்கும் தருகின்றார்கள்.

அந்த இடத்தில்தான் இந்த மாணவர்களுக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமில் பள்ளி மாணவர்கள் 85 பேர் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் நானும் உரையாட வருகிறேன் என்று மத்திய, மாநில அரசுகளில் அரசுச் செயலராக பணிபுரிந்த ஓர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்த அதிகாரியும் வந்திருந்தார்.

இந்த முகாமில் அனைத்து வசதிகளுக்கான செயல்களையும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்தினர். அடுத்து, கருத்துரைஅனைத்தையும்உரையாடல்களாகவே வடிவமைத்து அந்த மாணவர்களின் உள் திறனை அவர்களுக்குக் காண்பித்தது முகாமின் மற்றொரு சிறப்பு.

இந்த மாணவர்களின் செயல்களைப் பார்த்த அந்த ஓய்வுபெற்ற அரசுச் செயலர், இவர்கள் என்னுடன் கேள்வி கேட்டு உரையாடட்டும் என்று கூறி, ஒட்டுமொத்தவகுப்பையும் கேள்வி-பதிலாக மாற்றிவிட்டார். முதல் அமர்வில் அவர்களிடம் உரையாடலைத் தொடங்கியவர் பல கேள்விகளை முன்வைத்தார். அதில் முதல் கேள்வி, நாம் வாழும் உலகம் இன்று மிகவும் சிறப்பாக, அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறதா?

சற்றும் தாமதிக்காமல் இல்லை என்று பதில் தந்தனர். அதற்கு என்ன செய்வது? மறு கேள்வி. அடுத்த பதில், அதை மாற்ற வேண்டும். யார் மாற்றுவது? அதற்கும் உடனே, நாம்தான் என்ற பதில். எப்படி? உடனே தலைமை ஏற்க வேண்டும்.

MÁS HISTORIAS DE Dinamani Coimbatore

Dinamani Coimbatore

2026-ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு மறுமலர்ச்சி தருமா கேரளம்?

கடந்த ஆண்டு பிகார் மற்றும் தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்களில் மோசமான தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு 2026-ஆம் ஆண்டில் கேரளம் மறுமலர்ச்சியைத் தருமா?

time to read

1 mins

January 03, 2026

Dinamani Coimbatore

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

January 03, 2026

Dinamani Coimbatore

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Dinamani Coimbatore

புத்தாண்டு சபதங்கள்!

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.

time to read

2 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Coimbatore

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 02, 2026

Dinamani Coimbatore

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size