நாயைக் கொல்லாத புலி!
Dinamani Coimbatore
|July 01, 2025
விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.
சில நாள்களுக்கு முன்பு கேரளம் - தமிழ்நாடு எல்லையில், இடுக்கியில் உள்ள ஒரு ஏலக்காய் தோட்டத்தில், ஓர் ஆழமான குழியில் ஒரு புலியும் நாயும் விழுந்து கிடந்தன. பல மணிநேரம் கழித்துதான் வனத் துறையினர் வந்து அவற்றை மீட்டனர். நாயை வெளியில் விட்டபிறகு, புலியைப் பெரியார் புலிகள் காப்பகத்தில் கொண்டுவிட்டனர். இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் வந்து பலரது கவனத்தை ஈர்த்தது.
அவ்விரண்டு விலங்குகளும் வெகுநேரம் ஒரே குழியில் ஒன்றாகக் கிடந்திருக்கின்றன. இருந்தும், நாயை அந்தப் புலி கொன்று சாப்பிடவில்லை! பொதுவாக சிறுத்தை தான் நாயை வேட்டையாடி உண்ணுமே தவிர, நாயை புலி வேட்டையாடாது. ஏனெனில், நாய் புலியின் இயற்கையான இரை ஆகாது. மான், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளே புலியின் இயற்கையான இரையாகும். இரண்டு விலங்குகளுமே உயிர் பயத்தில் இருந்த போது, தப்புவது ஒன்றுதான் அவற்றின் தலையாய கவலையாய் இருந்திருக்குமேயன்றி, உணவைப் பற்றிய கவலை அப்போது இருந்திருக்காது.
விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. அதுவும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டே கொல்கின்றன. அந்தப் புலிக்குப் பசி வந்திருக்கலாம்; இருந்தாலும், தன்னுடன் சிக்கிக்கொண்டு, உயிர் பயத்துடன் இருந்த அந்த நாயின் மீது கருணை கொண்டு, அதை ஒன்றும் செய்யாமல் விட்டது. அந்த நாயும் புலியின் கருணையை உணர்ந்து செவ்வனே இருந்தது. ஐந்தாம் அறிவைத் தாண்டி அவை இரண்டும் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றனவோ எனத் தோன்றுகிறது!
மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. ஆனால், வயிற்றுப் பசி, உடற்பசி, கோபம், ஆணவம், பழிவாங்குதல் என்று ஏதேதோ காரணங்களுக்காகக் கொலை, கொள்ளை போன்ற மகாபாதகச் செயல்களைச் செய்கின்றார்களே! தம் ஆறாம் அறிவைக் கொண்டு இத்தகைய துர்க்குணங்களை விட்டொழிப்பதை விட்டுவிட்டு, இயற்கையின் நியதிக்கு மாறான, எண்ணிப் பார்க்கவும் அஞ்சத்தக்க கொடிய செயல்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களே!
விலங்குகள் திட்டம் வகுத்துக் கொலை செய்வதில்லை. பசிக்கும்போது தன்னை விடச் சிறிய விலங்கை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், மனிதர்கள் சாதுர்யமாகப் பலநாள் திட்டம் வகுத்துக் கொல்கின்றனர்.
Esta historia es de la edición July 01, 2025 de Dinamani Coimbatore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
கட்சி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் அரசிதழில் வெளியிட உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Coimbatore
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
திருமண பாக்கியம் அருளிடும் திருமால்
சோழநாட்டு காவிரியின் இருமருங்கிலும் சைவ, வைணவ பேதமின்றி ஒன்றோடொன்று புராணத் தொடர்பு பெற்ற சிறப்பு மிகு தலங்கள் அதிகம்.
1 mins
December 19, 2025
Translate
Change font size

