Facebook Pixel கூட்டணியில் பாமகவை இழுக்க கொக்கி போடும் பாஜ | Dinakaran Nagercoil - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

கூட்டணியில் பாமகவை இழுக்க கொக்கி போடும் பாஜ

Dinakaran Nagercoil

|

June 06, 2025

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலுக்கு காரணமாக, மாநில இளைஞரணி தலைவர் நியமன விவகாரம் என கூறப்பட்டாலும் அதன் பின்னணியில் கூட்டணி விவகாரமும் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. அதாவது ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பிய நிலையில், இரு கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் சந்திப்பின் வழியாக எடப்பாடி பழனிசாமியுடன் அவ்வப்போது நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் அன்புமணியோ நேர்மாறாக பாஜவுடன் அணி சேர்வதே கட்சிக்கு நல்லது என முடிவெடுத்தார்.

கூட்டணியில் பாமகவை இழுக்க கொக்கி போடும் பாஜ

இதன் காரணமாக கடந்த 2024 மார்ச் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜ அணியில் பாமக சேர்ந்தது. உடனே சேலம் விரைந்த ராமதாஸ், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தனது இருக்கைக்கு அருகில் வந்து வாங்க... வாங்க... என ராமதாசின் கையைப் பிடித்து உட்கார செய்த மோடி, சிறிதுநேரம் உரையாடினார். ஆனால் கூட்டத்தில் ராமதாசுக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் இறுக்க முகத்துடன் இருந்தார். பின்னர் கூட்டம் முடிந்து தைலாபுரம் திரும்பினார்.

ஆனால் இத்தேர்தலில் தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பாஜ மற்றும் பாமக தோல்வியை தழுவின. அன்புமணியின் மனைவி சவுமியா தர்மபுரியில் போட்டியிட்ட நிலையில் அவரும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஏற்கனவே பாமக தொடர்ந்து தேர்தல்களில் சறுக்கிய நிலையில், தான் உழைத்து வளர்த்தெடுத்த கட்சியை சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப் படிக்கட்டில் தூக்கி நிறுத்த ராமதாஸ் தொடர்ந்து ஆசைப்பட்டாலும் மகன் அன்புமணியும், மருமகள் சவுமியாவும் பாஜவுடன் கூட்டணி வைத்தாக வேண்டுமென்ற பிடிவாதத்தால் வேறுவழியின்றி இம்முடிவுக்கு தள்ளப்பட்டதாக அப்போதே பாமகவில் தகவல்கள் கசிந்தன.

இதை உறுதிபடுத்தும் விதமாக குடும்பத்திலும், கட்சியிலும் அன்புமணியால் தான் சந்தித்த சங்கடங்களையும், தனது நீண்டநாள் மனவேதனையையும் கடந்த 29ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்கள் முன்பு கொட்டினார் ராமதாஸ். அப்போது அவர் பேசுகையில், 'தவறு செய்தது அன்புமணி அல்ல... 35 வயதிலேவே அவரை ஒன்றிய கேபினட் அமைச்சராக்கி தவறு செய்தது நான்தான். பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும், இல்லாவிடில் எங்களுக்கு கொள்ளி வைக்க வேண்டும் என தனது காலை பிடித்து மகனும், மருமகளும் கெஞ்சினர்.

MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இன்று தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியின்றி தேர்வு சபாநாயகர் ஆகிறார் ஜே.சி.டி.பிரபாகர்

துணை சபாநாயகராகிறார் எம்.ரவிசங்கர்

time to read

1 min

May 12, 2026

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வழக்கு இருக்கும் கட்சி 41 தவேக எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள்

ஆய்வில் தகவல்

time to read

1 mins

May 12, 2026

Dinakaran Nagercoil

பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை

நெல்லை கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

time to read

1 min

May 12, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நேபாளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்த துருக்கி விமானம்

விபத்தில் தப்பிய பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

time to read

1 min

May 12, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருநங்கைகளுக்கு இடையே கோஷ்டி மோதல் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் மீது கற்களை வீசி கொலைவெறி தாக்குதல்

பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பல ஆண்டுக்கு பிறகு தாக்குதலால் பரபரப்பு

time to read

1 mins

May 12, 2026

Dinakaran Nagercoil

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக வி.பி. ஜி. ராம் ஜி. திட்டம் ஜூலை 1 முதல் அமல்

விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி இளம்நடிகர், ஒளிப்பதிவாளர் பலி

முதல் படம் வெளியான நிலையில் பரிதாபம்

time to read

1 min

May 12, 2026

Dinakaran Nagercoil

திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் தகராறு சலூன் கடைக்காரர் கொலை

திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார்.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Nagercoil

அசாமில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா

அசாமில் இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கிருஷ்ணகிரி அருகே 2 வாலிபர்கள் எரித்துக்கொலை

கரிக்கட்டையாக உடல்கள் மீட்பு போலீசார் விசாரணை

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size