CATEGORIES
Categorías
கிரகக் கோளாறு போக்கும் கைவிடேலப்பர்!
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தென் பாதியில் அமைந்துள்ளது அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது இந்த சிவன் கோயில்.
மழைக்காலத்தில் மானசா தேவி வழிபாடு!
மேற்கு வங்காளத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டாலே, மானசா தேவி வழிபாடும் ஆரம்பமாகி விடும். இங்கே விவசாயிகளும், வியாபாரிகளும் மானசா தேவி வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
கலைச்சின்னமாக விளங்கும் கற்றளிக் கோயில்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கண்ணனூரில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில். கண்ணனூர் சிறிய ஊராக இருப்பினும் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையும், 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்றளிக் கோயிலைக் கொண்ட பெருமையும் உடைய இயற்கை எழில் சூழ்ந்த தலமாகத் திகழ்கிறது.
நேர்த்திக்கடன் திருநாள்!
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற, அந்தக் குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து, தேவர்களையும் மக்களையும் காக்க அவ தரித்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் வகையில் ஆடி கிருத்திகை விரதத் திருநாளாகக் கொண்டாடப்படு கிறது.
ஜனனி...ஜனனி...
ஒரு பாடல் தன்னைப் பெற்றுக்கொள்கிற வர்களை, அவர்களது மனதடி வேர் வரை ஊடுருவுகிறது. நோய்மை காலத்து செவிலியின் உபசரணை போல் அந்தப் பாடலின் வருடல் நிகழ்கிறது. மனசு சரியில்லை என்றால் கேட்க விரும்பும் பாடல் சரணடைவதற்கான வாசல்தான் இல்லையா?
கிளிக்கு வரம் கொடுத்த தேவேந்திரன்!
வேலைக்குச் சென்ற கணவனை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் மனைவி. வீட்டில் இருக்கும் மாவைக்கொண்டு இருவருக்கும் உணவு தயாரித்து வைத்திருந்தாள். மொத்தம் 12 இட்லிகளை வார்க்கவே மாவு போதுமானதாக இருந்தது. அத்தனை இட்லிகளையுமா கணவன் சாப்பிடப்போகிறாள்? அவள் சாப்பிட்ட பின்னர் மிச்சமிருப்பதை நாம் சாப்பிட்டுக்கொள்ளலாம்' என எண்ணியிருந்தாள் அவள்.
தர்மம் தழைக்க வந்த தயாபரன்!
உலகில் எப்போதெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை சம்ஹரிக்கவும் பகவான் மஹாவிஷ்ணு அவதாரம் எடுக்கிறார். அப்படி, அதர்மத்தை அழிக்க பகவான் எடுத்த அவதாரமே ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்.
ஸ்ரீ பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்
திருநாங்கூரின் 11 திவ்ய க்ஷேத்ரங்களில், பலாசவனம் என்றும் புரசங்காடு என்றும் அழைக்கப்படுகிறது திருப்பார்த்தன் பள்ளி திருத்தலம். இது சரித்திரப் புகழ் வாய்ந்த பூம்புகாருக்கு அருகில், நவக்கிரக க்ஷேத்ரங்களுள் புத பகவான் தலமான திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில், புனித நதியான காவிரியாற்றின் ஒரு பிரிவான மணிகர்ணிகா ஆற்றின் அருகாமையில் அமைந்திருக்கிறது.
வாசுகிக்கு வரம் தந்த இறைவன்!
நவக்கிரகங்களில் கடைசி கிரகமான கேது பகவான் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது நாகை மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில். இறைவன் நாகநாத சுவாமி. இறைவி சௌந்தரநாயகி.
பனைத் துணையளவு அருளும் அம்மன்!
எனது கணவர் திருவக்கரை வக்ரகாளி அம்மனின் தீவிர பக்தர். இந்தக் கோயிலில் நடை பெறும் பௌர்ணமி பூஜையில் அடிக்கடி கலந்துகொள் வது அவரது வழக்கம்.
அறிவுக் கண்ணைத் திறந்த ஆசான்!
மணம் எதை விரும்புகிறதோ அதைப் பெற்றுத் தரும் என்பதைத்தான் வேதாத்திரி மஹரிஷி திரும்பத் திரும்ப சொல்லும் கருத்து. அது, அவரின் வாழ்க்கையில் அச்சுப் பிசகாமல் நடைபெற்றது.
கலாசார கட்டமைப்போடு அயோத்தி ஸ்ரீராமர் கோயில்!
அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்தின் பூமி பூஜை இன்று (ஆகஸ்ட் 5) நடைபெறுகிறது. இது தொடர்பாகவும், சமீபத்தில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, *ஸ்ரீராமர் ஒரு நேபாளி என்றும் தசரதர் ஆண்ட அயோத்தி நேபாள நாட்டில்தான் இருக்கிறது' என்று கூறியிருந்தார். இதுகுறித்து காஞ்சி சங்கராச்சார்யார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், "தீபம்' மின் இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி...
அம்பாள் வதனம் அதிசயம்!
அம்பாளை கேசாதிபாதமாக வர்ணிக்கிறார் ஆதிசங்கரர். பலவகையான உவம உவமானங்களைக் காட்டி, அம்மாவின் பொற்பாதங்களில் நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகிறார். இவ்வாறு விவரித்துக்கொண்டே வரும்போது. அம்பாளின் உதடுகளைப் பற்றிக் கூறுவதற்குத் தக்க உவமை கிட்டாமல் தவிக்கிறார்.
மருத்துவரான மகான்!
பதினேழு வயதில் பிழைப்பு தேடி பட்டினம் வந்து சேரும் ஒரு இளைஞனுக்கு குதிரை பந்தயம் நிகழ்த்தும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் எப்படி இருக்கும்? குதிரை பந்தயம் என்ற ஒரு வார்த்தையைக் கேட்டாலே முகம் சுளிப்பர் பலர்.
கோடி புண்ணியம் கொடுப்பாள் கோலாரம்மா!
பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 68 கி.மீ. தொலைவில் உள்ளது கோலார் நகரம். நாட்டின் மிகப் பெரிய தங்கச் சுரங்கம் இங்கு மிகவும் பிரபலம். இந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டு 3ஆம் நூற்றாண்டில் அரசாட்சி செய்தவர்கள் கங்க மன்னர்கள்.
திருத்தேவனார்தொகை ஸ்ரீ மாதவப் பெருமாள்
முன்னொரு காலத்தில் பெருமானை சேவிப்பதற்காக தேவர்கள் வந்து திரண்ட இடமாதலால், திருத்தேவனார்தொகை என்ற பெயர் அமைந்தது. (தேவனார் தேவர்கள்; தொகை நெருங்கி நின்ற இடம்.)
இரு அமைப்பில் அபூர்வ முருகன்!
கேரள மாநிலம், ஆல் வாய்க்கு அருகில் பரூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், இளங்குன்னபுழா கிராமத்தில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருத்தலத்தை, கேரளாவின் திருச்செந்தூர்' என்று அழைக்கின்றனர். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள, 'வல்லார் பாடம்' என்ற கடல் சூழ்ந்த சிறு தீவில் விக்ரகம் ஒன்று ஒதுங்கியது.
மலைக்கோட்டையில் அருளும் இளங்காட்டு மாரியம்மன்!
தஞ்சைக்கு அருகே உள்ளது இளங்காடு திருத் தலம். இந்த ஊரில் தாம் தங்குவதற்கு சரியான இடமில்லாமல் இருந்தாள் அன்னை இளங்காட்டு மாரியம்மன். தனது நிலை பற்றி மூத்த சகோதரி சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டாள் தங்கை.
வளம் தரும் வரலக்ஷ்மி விரதம்!
ஆடி மாதம் பிறந்து விட்டாலே பண்டிகைகளுக்குக் குறைவிருக்காது. அந்த வகையில் சுமங்கலிப் பெண்களால் மிகவும் பக்தி சிரத்தையுடன் கடைபிடிக்கப்படும் விரதங்களில் வரலஷ்மி விரதமும் ஒன்று.
மின்னாயிரம் மெய்வடிவான அம்பாள்!
அம்பாள் எப்படிக் காட்சிதருவாள்? 'இதென்ன கேள்வி? அம்பாளின் வடிவத்தைத்தான் ஏற்கெனவே கண்டிருக்கிறோமே' என்கிறீர்களா? செந்நிற மேனியளாய், திருக்கரங்கள் நான்கு கொண்டவளாய், அபயம் வர ஹஸ்தங்கள் தாங்கியவளாய், கருணை முகத்தவளாய்.... இப்படியெல்லாம்தானே அம்பாள் காட்சி தருவாள்!
கொடி மரமான மன்னன்!
மகாபாரதப் போருக்குப் பிறகு தர்மர் நிறைய நன்கொடைகள் வழங்கி, உலகிலேயே தன்னை சிறந்த நீதிமானாகக் காண்பித்துக் கொண்டார். இதை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், இந்த விஷயத்தில் தர்மருக்கு பாடம் புகட்ட எண்ணி, அவரை ஒரு அசுவமேத யாகம் செய்யச் சொன்னார்.
தர்மத்தில் உயர்ந்தது!
தர்மம் நான்கு விதமாகப் பேசப்படுகிறது. அவை சாமானிய தர்மம், சேஷ தர்மம், விசேஷ தர்மம், விசேஷதர தர்மம் ஆகும்.
எண்ணமெல்லாம் நிறைவாள்!
ரசனை என்பது அலாதியானது. ஆறு முக வாத்தியார், 'அது கடனாக பாயிருந்தாலும் கடனே என்று கழித்துவிட முடியாது' என்பார். கேட்டால், ‘பற்று என்பது பற்றிக்கொண்டால்தானே' எனச் சிரிப்பார். எவ்வளவு பெரிய கப்பல் என்றாலும், தரைதட்டி விடாமல் அதை நிறுத்துவது யாரும் பார்க்கவியலாத நங்கூரத்தின் பிடிமானம்தானே?
ஆடி வெள்ளி சிறப்புகள்!
ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்தது. அதுவும், ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனை வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித் தருவதாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு.
கல்யாண வரம் தரும் கோதை நாச்சியார்!
திருவாடிப்பூரத்தில் அவதரித்து அரங்கன் மேல் ஆறாக்காதல் கொண்டு பாமாலையும், பூமாலையும் சூடி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான, கோதை என்னும் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். இவளது தந்தை பெரியாழ்வார்.
அன்பொன்றே வாழ்வின் ஆதாரம்!
'அம்மா’வில் தொடங்கி, அடுக்கடுக்காய்ப் பல உறவுகள். அத்தனைக்கும் சிகரமாக இருப்பது கணவன் மனைவி எனும் கருத்தொருமித்த பந்தம். அந்த பந்தம் நிலைத்து நீடிக்க, அவர்களுக்கிடையே அன்பு நிலைத்திருக்க வேண்டும்.
அரச கோலத்தில் ஸ்ரீ மதுவன ராமர்!
சோழவள திருநாட்டில் பசுமை பொங்கும் எழில் வயல்வெளிப் பகுதியில் வலங்கைமான் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார் அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி!
அனுமன் தலையில் சனீஸ்வரன்!
சனீஸ்வரன் ஒருவரை ஏழரை ஆண்டுக் காலம் பிடிப்பதை, 'ஏழரைச் சனி' என்று அழைப்பர். இதற்கு சிவபெருமான் உட்பட்ட கடவுளர் எவரும் விதிவிலக்கல்ல! அந்த வகையில் அனுமனை ஏழரைச் சனி பிடிக்கும் வேளை வந்தது.
வெள்ளைப் பூக்கள் சிவப்பாக மாறியது ஏன்?
ஸ்ரீராம பக்தரான துளசிதாசர் தனது வீட்டு பூஜை அறையில் அமர்ந்து ராமாயணகாவியத்தை பாக்களாக எழுதிக்கொண்டிருந்தார். அவர் முன்பு ஸ்ரீராம பக்த அனுமனும் அரூபமாக அமர்ந்து, அவர் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் ஆனந்த பாஷ்யத்துடன் ரசித்துக்கொண்டிருந்தார். சுந்தர காண்டத்தில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார் மன இறுக்கத் தோடு அமர்ந்துள்ள காட்சி வர்ணிக்கப்படுகிறது.
சந்ததியை வாழ வைக்கும் வழிபாடு!
வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசை தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.