இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
Penmani
|December 2024
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
அவருக்குள் இருந்த எழுத்தாளனை வெளியில் கொண்டு வந்து சாதித்தார். சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்தடம் பதித்தார். இது சாத்தியமானதுக்கான காரணங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தான் இயற்றிய சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.
திருநெல்வேலி அருகே உள்ள ராஜ வல்லிபுரம் என்ற ஊரில், 1920 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சுப்ரமணிய பிள்ளை -மகமாயி அம்மாள்.
இவருக்கு பத்து வயது இருக்கும் போது தந்தையார் மறைந்தார்.
அதனால் கல்லூரி படிப்பு கிட்டவில்லை. குடும்ப சூழ்நிலை,வேலைக்கு சென்று வருவாய் ஈட்டும் நெருக்கடியை அவருக்குக் கொடுத்தது.
பரமக்குடியில் இருந்த அரசு அலுவலகத்தில் வேலை கிடைத்தது. உப்பள ஆய்வாளராக சிலகாலம் பணியாற்றினார்.
முதல் மாதம் சம்பளமாக அவர் பெற்றது 19 ரூபாய். அதில் ஒன்பது ரூபாய் வீட்டிற்கு அனுப்பினார். தன்னுடைய செலவு போக உபரியாக 5 ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தில் பத்திரிகைகளும் ஏராளமான புத்தகங்களும் வாங்கிப் படித்தார். பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
சாதனை படைத்தவர்கள் ஆரம்ப நாட்களில் பயணித்தது போல இவருடைய தொடக்க காலமும் முட்கள் நிறைந்ததாக இருந்தது. பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும் இலக்கியத்தின் பால் இருந்த நாட்டத்தின் காரணமாகவும் அரசு வேலையை ராஜினாமா செய்தார்.
சென்னைக்குச் சென்றால் எழுத்தாளனாக ஆகி விடலாம் என்று இவருடைய உள்ளுணர்வு சொன்னது.
Diese Geschichte stammt aus der December 2024-Ausgabe von Penmani.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Penmani
Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025
Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025
Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025
Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025
Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025
Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025
Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size
