Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

புதைக்கப்படும் சடலங்கள் பல்லாண்டுகளாகியும் அழுகாதிருக்க காரணம் என்ன?

Virakesari Daily

|

September 22, 2025

பெரும்பாலும் ஒருவர் இறந்த பின் அவரைப் புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குச் சிறிது நேரம் எடுக்கும்.

புதைக்கப்படும் சடலங்கள் பல்லாண்டுகளாகியும் அழுகாதிருக்க காரணம் என்ன?

முன்பெல்லாம் கோடைக் காலத்தில் ஒருவர் இறக்கும்போது, இறந்தவரின் உடல் சாக்குத் துணியில் மூடப்படும். ஆனால் இப்போது குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாகனங்கள் அதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பதப்படுத்தப்பட வேண்டிய சடலங்கள், குறைவான வெப்ப நிலையில் வைக்கப்படுவதன் மூலம் அவை விரைவில் அழுகாமல் இருக்கின்றன.

அறிவியலின்படி, ஒருவர் இறந்த பிறகு சடலத்தின் மீது பக்டீரியாக்கள் வளருகின்றன. உடல் அழுக முக்கிய காரணம் இதுதான். வழக்கமாக, இறந்து 12 மணிநேரம் கழித்து உடல் அழுக ஆரம்பிக்கிறது.

ஆனால், பல வேளைகளில், உடல்கள் புதைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அவை அழுகுவதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பழைமையான கல்லறைகளைத் தோண்டியபோது, பல ஆண்டுகள் கழித்தும் அதிலிருந்த சடலங்கள் கிட்டத்தட்ட அப்படியே இருந்தன. இது பெரும்பாலும் மத ரீதியிலான பார்வையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், இதற்குப் பின்னால் அறிவியல் ரீதியிலான காரணங்களும் உள்ளன.

இப்படியான சூழல்களில், உடல்கள் அழுகாமல் இருக்க பல காரணிகள் உள்ளன.

இதற்குத் தடயவியல் விஞ்ஞானிகள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, மம்மிஃபிகேஷன் எனப்படும் உடல் அழுகாமல் பதப்படுத்தும் செயல்முறை (mummification). மற்றொன்று, இறந்த உடல் முழுவதும் மெழுகு போன்ற பொருளால் பூசப்படுவது (adopasory), இது உடல் அழுகாமல் தடுக்கிறது.

இயற்கையாகவே 'மம்மி'யாதல் வறண்ட காற்று மற்றும் ஈரப்பதம் மிகவும் குறைவாக, அதிக வெப்பநிலை உள்ள சூழல்களில் இறந்த உடல்களை வைக்கும்போது, உடலில் நீர் உள்ள பகுதிகள் வேகமாக வறண்டு விடுகின்றன. இதன் காரணமாக, உடலில் பக்டீரியாக்கள் வளர முடியாமல், உடல் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும்.

சேர் சலீம் உல்லாஹ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் நஸ்முன் நஹார் ரோஸி, இந்தச் செயல்முறைக்கு மம்மிஃபிகேஷன் என்று பெயர் எனத் தெரிவித்தார்.

இந்தச் செயல்முறை உடலைப் பதப்படுத்துவதற்காகச் செய்யப்படுகிறது. இதன்காரணமாக, பாலைவனங்களில் பல சடலங்கள் இயற்கையாகவே 'மம்மி'யாகி விடுகின்றன. பல ஆண்டுகள் அழுகாமல் அதே நிலையில் இருக்கின்றன.

வறண்ட மணலுள்ள பகுதிகளில் சடலங்கள் இயற்கையாகவே பதப்படுத்தப்படுவது சாத்தியம்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back