Versuchen GOLD - Frei

சர்ச்சைக்குரிய தீர்மானங்களை எடுக்க தயங்கவே மாட்டேன்

Virakesari Daily

|

September 03, 2025

வடக்கு தொடர்பாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் அரசியல் தென் பகுதியில் நடக்கின்றது; புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி அறிவிப்பு

- இராஜதுரை ஹஷான்

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு சர்ச்சைக்குரிய வகையில் தீர்மானங்களை எடுப்பதற்கும் பின்வாங்கப் போவதில்லை. பழைய இனவாத கோஷங்களுக்கு எதிரான செயற்பாடுகளை மீளப்பெறப் போவதில்லை.

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. காணி உரிமை மற்றும் தமது இடங்களில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. முற்போக்கான தீர்மானங்களை எடுக்கும் போது இனவாதிகள் கோஷமிடுவார்கள். அந்தக் கோஷங்கள் வெற்றிபெற இடமளிக்கப் போவதில்லை. வடக்கை அச்சுறுத்தலான நிலையில் வைத்திருக்கவே தெற்கில் ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வடமாகாணம் தொடர்பாக தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தும் அரசியல் ஒன்று தென்பகுதியில் நடக்கின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில் 'நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம் - கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா நேற்று (02) ஜனாதிபதியின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில், புதுக்குடியிருப்பு பிரதேசமானது பின்தங்கிய நிலையிலும், கடந்த கால மோதல்களினால் இந்த பிரதேச மக்கள் பலவற்றை இழந்துள்ளார்கள். பிள்ளைகள், உறவுகள் உட்பட தமது உடமைகளை இழந்தவர்கள் இந்த பிரதேசத்தில் வாழ்கிறார்கள்.

சமீபத்திய தேர்தல்களின் போது நான் வடக்கு மாகாணத்துக்கு வந்து உரையாற்றியிருந்தேன். மோதல் உட்பட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு மீண்டும் சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பு எமக்குண்டு.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size