Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

வழமையான நீதியா அல்லது நிலைமாறுகால நீதியா?

Virakesari Daily

|

August 14, 2025

காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகம் ஒப்பீட்டளவில் மௌனம் சாதித்து வருகிறது. ஏனைய சர்வதேச நெருக்கடிகளை கையாளும்போது கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதை தவிர்த்து, சர்வதேச சமூகம் மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதால் அசௌகரியமான ஒரு நிலை காணப்படுகிறது. இத்தகைய ஒரு சூழ்நிலை இந்த தடவை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படக்கூடிய தீர்மானம் கடுமைகுறைந்ததாக இருக்கும் என்பதற்கு நம்பகமான காரணமாக இருக்கலாம்.

- கலாநிதி ஜெகான் பெரேரா

ஒழுங்கான முறையில் பிரயோகிக்கப்படாத மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைத்து இலங்கைக்கு எதிராக கடுமையான ஒரு தீர்மானத்துக்கு வாக்களிப்பதில் மேற்குலகைச் சாராத நாடுகளுக்கு பெரிதாக அக்கறை இல்லை.

மறுபுறத்தில், உள்நாட்டு விசாரணைகளின் பக்கச்சார்பின்மை மீது நம்பிக்கை இல்லை என்று கூறி தமிழ் அரசியல் கட்சிகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

அதேவேளை, ஏற்கனவே அறியப்பட்ட மனிதப்புதைகுழி பகுதிகளிலிருந்து தோண்டியெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தேசிய நல்லிணக்கம் மீதான அரசாங்கத்தின் பற்றுறுதிக்கு ஒரு பரீட்சையாக அமைந்திருக்கின்றன. செம்மணியில் புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மேலதிக மனித எச்சங்கள் மீட்கப்படுகின்றன. செம்மணியில் மனித புதைகுழிகள் இருப்பது 1998ஆம் ஆண்டிலிருந்தே தெரிந்த விடயமாகும். பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததுடன் அவரைத் தேடிச்சென்ற உறவினர்களையும் கொலை செய்ததாக படையினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட இராணுவ அதிகாரிகள் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் செம்மணியில் பெரும் எண்ணிக்கையானோர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறியிருந்தனர். உண்மைக்கு முகம்கொடுப்பதை தவிர்ப்பதற்காக அரசாங்கங்கள் அந்த புதைகுழிகள் தொடர்பிலான விசாரணைகளை தடுத்தன அல்லது தாமதப்படுத்தின. இது தொடர்பான அக்கறைகளை கடந்தவாரம் ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில் வெளிப்படுத்தினார்.

செம்மணி விசாரணையில் அரசாங்கம் தலையீட்டைச் செய்யப்போவதில்லை என்று மீண்டும் உறுதியளித்த ஜனாதிபதி, பொலிஸும் சட்டமா அதிபர் திணைக்களமும் நீதித்துறையும் சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கூறினார்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size