Versuchen GOLD - Frei
42 ஆண்டுகளாகியும் ஆறாத வடுவாக 83 ஆடிக்கலவரம்
Virakesari Daily
|July 23, 2025
இலங்கை ஒரு இனக்கலவரம் கொண்ட நாடு என்பதையும் இங்குள்ள தமிழர்கள் காரண காரியமின்றி காலத்துக்குக் காலம் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் உலகுக்கு பச்சையாக வெளிப்படுத்திக் காட்டிய இனக்கலவரம் 1983 ஆம் ஆண்டு ஆடிமாதம் இடம்பெற்ற கலவரமாகும். இக்கலவரம் நடந்து 42 வருடங்கள் கழிந்தோடிவிட்டபோதும், இதற்கான பரிகாரங்கள் தேடப்படவுமில்லை. அடையாளங்கள் நீக்கப்படவுமில்லை. இந்த அரக்கத்தன மான விளைவுகளின் தொடர்ச்சியே இன்று செம்மணியிலும் முள்ளிவாய்க்காலிலும் கண்டுகொள்ளக் கூடியதாயிருக்கிறது.
-
இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரங்கள் முதன்முதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது 1956 ஆம் ஆண்டில்தான். கிழக்கில் (கல்லோயா) 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுவே தமிழர்களுக்கு எதிராக முதன்முதல் ஆரம்பித்து வைக்கப்பட்ட இனக்கலவரமாகும். இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தமிழர்களையும், சிங்களவர்களையும் மோதவிடும் தந்திரோபாயத்தைப் பிரித்தானியர் மிக திட்டமிட்ட முறையில் மேற்கொண்டார்கள் என்பதற்கு 1883 இடம் பெற்ற கொட்டாஞ்சேனைக் கலவரம், 1939 ஆம் ஆண்டு இடம் பெற்ற நாவலப்பிட்டி கலவரம், 1958 ஆம் ஆண்டு உண்டாக்கப்பட்ட அரசியல் கலவரம் என்பவை இலங்கை அரசாங்கங்களுடைய அதிகாரத்தைத் தாண்டி அயல்நாடுகளோ அந்நிய நாடுகளோ தெரிந்து கொள்ள முடியாத கலவரங்களாக இருந்தன. இக்காரணத்தினால் ஈழத்தீவில் வாழும் சிறுபான்மை மக்கள் அதிகாரம் படைத்த ஆட்சி வர்க்கத்தால் அழிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வெளியாகி சொல்ல முடியாத அடைக்கப்பட்ட தகவல்களாகவே இருந்தன. ஆனால் 1983 ஆம் ஆண்டுக் கலவரமென்பது இந்த நிலைமைகளை உடைத்தெறிந்து இலங்கைவாழ் தமிழர்களுக்கு அரசியல் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக இழைக்கப்படும் கொடுமைகளைப் புடம் போட்டுக் காட்டிய கலவரமாக மாறியது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் என்ற சிறுபான்மை சமூகம் தமது தேசிய உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்தது.
இக்கலவரம் தோன்றியதற்கான காரணங்கள், அது ஏற்படுத்திய அழிவுகள், அட்டூழியங்கள் மற்றும் விளைவுகளைத் தெரிந்து கொள்வது இந்தக் கலவரத்தின் உக்கிரத்தைத் தெரிந்து கொள்ள உதவலாம். கறைபடிந்த கறுப்பு ஜூலையென கொடூர வரிகளாலும் செம்மைக் குருதியாலும் வர்ணிக்கப்பட்ட இந்தக் கலவரம் தோன்றியதற்கான காரணங்கள் இவ்வாறுதான் ஏற்பட்டது என்பதை பத்தரிகைகளும் ஏடுகளும் விவரித்துக் காட்டியுள்ளன.
Diese Geschichte stammt aus der July 23, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

