Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

அகதி என்ற நிலையிலிருந்து வெளியேறுவது கண்ணியமான வாழ்க்கையை மீட்டெடுப்பது

Virakesari Daily

|

June 23, 2025

இந்தியாவிலும் இலங்கையிலும் அண்மையில் இடம்பெற்ற ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத இரு சம்பவங்கள், 30 வருடங்களுக்கும் அதிகமான காலமாக வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளை நாடு திருப்பி அனுப்புதலுடனும் உள்நாட்டில் ஒருங்கிணைப்பதுடனும் தொடர்புடைய பிரச்சினை மீது கவனத்தைக் குவிக்க வைத்திருக்கிறது.

- தி.இராமகிருஷ்ணன்

முதலாவது சம்பவத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட அகதியொருவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை பத்து வருடங்களில் இருந்து ஏழு வருடங்களாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையீடு செய்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் மறுத்தது.

தனது தண்டனை முடிவடையும் போது இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவாதம் வழங்கிய குற்றவாளி தனது தண்டனை முடிவடைந்த நிலையில், இந்தியாவில் குடியேறும் நோக்குடன் உச்சநீதிமன்றத்தை நாடினார். அதை விசாரணை செய்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள், "உலகம் பூராவும் இருந்து வரும் அகதிகளுக்கு இடம்கொடுக்க இந்தியா ஒரு தர்மசத்திரம் அல்ல" என்று எழுத்தில் அல்ல வாய்மூலமாக கூறினர். இந்திய நீதிமன்றங்கள் பல சந்தர்ப்பங்களில் அகதிகள் தொடர்பில் மிகவும் அனுதாபமாக நடந்துகொண்டிருந்ததால், இந்த நீதிபதிகளின் கருத்து அகதிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மற்றைய சம்பவத்தில், தமிழ்நாட்டில் பல வருடங்களை கழித்த பிறகு தனது சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பிய எழுபது வயதான ஒரு அகதி யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அதிகாரிகளினால் தடுத்துவைக்கப்பட்டார். இது அவருக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. "செல்லுபடியாகக்கூடிய ஆவணங்கள்" இல்லாமல் அவர் இலங்கையை விட்டு வெளியேறியதே தடுத்து வைக்கப்பட்டமைக்கான காரணமாகக் கூறப்பட்டது. அவர் இலங்கை திரும்புவதற்கு சென்னையிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமே அனுசரணை செய்தபோதிலும்கூட அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size