Versuchen GOLD - Frei
ஒப்பற்ற கடல் செல்வங்களுக்கு அச்சுறுத்தல்; இலங்கையும், இந்தியாவும் சந்திக்கும் புதிய நெருக்கடி!
Virakesari Daily
|June 17, 2025
இலங்கையின் கடல் வளம் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்பு 'எம். வி. எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலால் ஏற்பட்ட பேரழிவு இன்னும் ஆறாத நிலையில், இந்தியக் கடற்பரப்பில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு கப்பல் விபத்துகள் இலங்கையை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள் ளன. இந்து சமுத்திரத்தின் முத்தாகக் கருதப்படும் இலங்கைக்கு, இத்த கைய தொடர் விபத்துகள் நீண்ட கால துயரத்தை ஏற்படுத்துகின்றன.
புதிய அச்சுறுத்தல்:
கடந்த ஜூன் 9, 2025 அன்று, சிங்கப் பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலான 'எம்.வி. வான் ஹை 503', கொழும் பிலிருந்து மும்பை நோக்கிச் செல் லும்போது கேரளக் கடற்பரப்பில் தீப்பிடித்து வெடித்தது. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் போன்ற ஆபத்தான இர சாயனங்கள் அந்தக் கொள்கலன் களில் இருந்ததால், கேரளத்தின் மீன்பிடித்தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
இந்த விபத்து நடப்பதற்கு முன்ன தாக, மே 25, 2025 அன்று, லைபீ ரியாக் கொடியுடன் பயணித்த 'எம்எஸ்சி எல்சா 3' என்ற சரக்குக் கப்பல் கொச்சி கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் மூழ் கியது. இதில் 640 கொள்கலன்கள் இருந்தன; அவற்றுள் 13 கொள்க லன்களில் ஆபத்தான இரசாயனங் களும், 12 கொள்கலன்களில் கல் சியம் கார்பைட்டும் இருந்தன.
இவற்றுள் சுமார் 100 கொள்க லன்கள் கடலில் மிதந்து, இந்தி யாவின் ஆலப்புழா, கொல்லம், திரு வனந்தபுரம், எர்ணாகுளம், மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி கடற் கரைகளில் கரை ஒதுங்கின.
இதில் பிளாஸ்டிக் துகள்கள், பொலித்தீன், கல்சியம் கார்பைட் போன்ற ஆபத்தான பொருட்கள் அடங்கும். தமிழகத்தின் தனுஷ் கோடி பகுதியிலும் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் துகள்கள் கரை ஒதுங்கியுள்ளன. கேரள அரசு இந்தச் சம்பவத்தை 'மாநிலப் பேரிடர்' என அறிவித்துள்ளது.
இலங்கையை வந்தடையும் பாதிப்புகள்
இந்தியக் கடற்பரப்பில் ஏற்பட்ட இந்த விபத்துகளின் தாக்கம் இலங் கையையும் விட்டுவைக்கவில்லை. யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோரப் பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு, மற்றும் நெடுந்தீவு கடற்கரைகளில் தற் போது அதிக அளவில் பிளாஸ்டிக் துகள்கள் (Plastic Nurdle) கரை ஒதுங்கி வருகின்றன.
இவை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான முக் கிய மூலப்பொருட்கள் என்பதுடன், சூழலுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை என கடற் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளது. இந்த பொருட் களைத் தொடுவதையோ அல்லது எடுத்துச் செல்வதையோ தவிர்க் குமாறு பொதுமக்களும் கடற்றொ ழிலாளர்களும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.
Diese Geschichte stammt aus der June 17, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

