Versuchen GOLD - Frei
கதி கலங்க வைக்கும் ‘வெள்ளிக்கிழமை’
Tamil Mirror
|September 04, 2025
சட்டம் அனைவருக்கும் சமம், ஊழல், மோசடி செய்த, குற்றங்கள் புரிந்த அரசியல்வாதிகள் எத்தரத்தில் இருந்தாலும் சிறை செல்வார்கள் என்று கூறி மீண்டும் கைது வேட்டையை ஆரம்பித்துள்ள அனுரகுமார அரசு முன்னாள் ஜனாதிபதி ரணிலாலும் கை வைத்துள்ளதுடன், 'வெள்ளிக்கிழமை கைது'களை ஆரம்பித்துள்ளதால் வெள்ளிக்கிழமை என்றாலே முன்னாள் அரசியல் வாதிகள் கதி கலங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, கைதுக்கு 'வெள்ளிக்கிழமை' நாள் குறிக்கப்படுவதனால் இக்கைதுகள் அரசியல் பழிவாங்கலை நோக்காகக் கொண்ட கைதுகள் என்ற குற்றச் சாட்டுக்களும் எழுந்துள்ளன.
ஒருவர் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டு, மாலை நேரத்தில் கைது செய்யப்பட்டால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படும்போது, நீதிமன்றம் பெரும்பாலும் அவருக்குப் பிணை வழங்காது. ஆகக்குறைந்தது திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறே உத்தரவிடும். சனி, ஞாயிறு தினங்களில் நீதிமன்றங்கள் செயற்படாது. இத்தினங்களில் கைதாவோர் நீதிபதிகளின் வாசஸ்தலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்படுவார்கள். அவ்வாறு ஆஜர்படுத்தப்படுவோருக்கு இத்தினங்களில் பிணை வழங்க முடியாது. அவர்களும் விளக்க மறியலில்தான் வைக்கப்படுவார்கள். ஆகவேதான், வெள்ளிக்கிழமை ஒருவரை கைது செய்து நீதிமன்றங்களில், ஆஜர்படுத்தும்போது, அந்நபர் ஆகக்குறைந்தது 4 தினங்களாவது விளக்க மறியலில் இருந்தாக வேண்டும்.
அவ்வாறானதொரு பழிவாங்கும் உணர்விலேயே எப்படியாவது 4 தினங்களாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு நன்கு திட்டமிட்டே முன்னாள் ஜனாதிபதி ரணில், 'வெள்ளிக்கிழமை' கைது செய்யப்பட்டுப் பிணை கிடைத்து விடக்கூடாது என்பதற்காக நீண்ட தாமதத்தின் பின்னர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு அங்கும் திட்டமிட்ட மின்தடையை ஏற்படுத்தி வழக்கு விசாரணையை மேலும் தாமதப்படுத்தி அவரை திங்கட்கிழமை வரையில் சிறையில் அடைத்து அனுரகுமார அரசு திருப்தியடைந்தது. அதே 'வெள்ளிக்கிழமை' கைதுகள் தான் தற்போது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த கைது வேட்டையில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் ராஜபக்ஷக்களின் தீவிர விசுவாசியுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சிக்கினார். குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியில் வந்தார். அடுத்த அதிரடியாகப் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரான அனுர பிரியதர்சன யாப்பாவை அவரது மனைவியுடன் அனுரகுமார அரசு அதிரடியாகக் கைது செய்து அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் அவர்களும் பிணையில் வெளியே வந்தனர்.
Diese Geschichte stammt aus der September 04, 2025-Ausgabe von Tamil Mirror.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
