Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Dinamani Virudhunagar

|

May 26, 2025

சிவகாசி, மே 25: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசுகள் தயாரிக்கும் அறை தரைமட்டமானது. விடுமுறை தினம் என்பதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

சிவகாசி அருகேயுள்ள அம்மாபட்டியில் தங்கப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று செயல்பட்டு வரும் இந்த ஆலையில், மருந்துக் கலவை அறை, பட்டாசுகள் தயாரிக்கும் அறை உள்ளிட்ட 30 அறைகள் உள்ளன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

தடைக்குப் பின்னால்...

ஹைதராபாத்தில் குழந்தை மருத்துவராகப் பணி புரியும் மருத்துவர் சிவரஞ்சனியின் எட்டு ஆண்டு காலப் போராட்டம் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம் 'போலி ஓ.ஆர்.எஸ்.' பானங்களை சந்தையில் விற்கத் தடைசெய்துள்ளது. காஜீபுரத்தில் தயாரிக்கப்பட்ட தரமில்லாத இருமல் மருந்து பல குழந்தைகளை உயிர்ப்பலி வாங்கியிருப்பதுதான் ஆணையத்தை இந்த நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.

time to read

1 mins

October 26, 2025

Dinamani Virudhunagar

ஏ.ஐ. தரும் வேலைத் தளர்ச்சி

'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் 'ஏ.ஐ.' எவ்வளவு வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் இப்போது ஊடுருவிவிட்டதோ, அதே வேகத்தில் அது தந்திருக்கும் புதிய வார்த்தையும் உலகெங்கும் இப்போது பரவி வருகிறது. அதுதான் 'ஒர்க் ஸ்லாப்' அல்லது 'ஏ.ஐ. ஸ்லாப்'. இதன் பொருள் ஏ.ஐ-யினால் வரும் வேலைத் தளர்ச்சி!

time to read

1 min

October 26, 2025

Dinamani Virudhunagar

'விஞ்ஞான ரத்னா' விருது: மறைந்த வானியற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் தேர்வு

விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ விருதுகளும் அறிவிப்பு

time to read

1 min

October 26, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அறம் கூறும் புறம்...!

அறம் எவ்வாறு உருவானது ...? மனிதர்கள் தோன்றிய போதே அவருடன் ஒட்டிப் பிறந்ததா அறம்? அன்று. வாழ்வியல் சூழல் களால், மனிதர்களின் மனத்தில் தோன்றிய உயர்வான சிந்தனையே அறம். இந்த சமூ கத்தை முன்னோக்கிச் செலுத்துகிற கால சக்கரம் அறம்.

time to read

1 mins

October 26, 2025

Dinamani Virudhunagar

எழுதிக் கொண்டே இருப்பேன்...

கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக, என்னை முன்னாள் முதல்வர் கருணாநிதியே வெகுவாகப் பாராட்டினார். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கடராமன், முன்னாள் ஆளுநர் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். அவசரநிலை பிரகடனத்தின்போது, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை இந்திரா காந்தி எவ்வாறு தலைகீழாக மாற்றி நாட்டை அடிமையாக்கினார் என்பதைப் பற்றிய ஒரு நூலை நான் எழுதினேன். அந்த நூலை 1992-இல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வெளியிட்டு, என்னைப் பாராட்டினார். அம்பேத்கர் பித்தனான நான், 'அம்பேத்கர் எவ்வாறு அரசியல் சாசனத்தை உருவாக்கினார்' என்பதைப் பற்றிய ஆங்கில நூலை எழுதினேன். அதை எல். கே. அத்வானி வெளியிட்டார். 98 வயதிலும் நான் பல்வேறு பழைய விஷயங்கள், உண்மைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். முக்கியப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், நாட்டை வெகு விரைவில் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்கு உறுதுணையாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்” என்கிறார் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே.

time to read

1 min

October 26, 2025

Dinamani Virudhunagar

நல்லாசானாய் - வழிகாட்டியாய்!

பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.

time to read

2 mins

October 26, 2025

Dinamani Virudhunagar

அசத்தும் ஆசிரியர்...

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆ.மணிகண்டன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனராகவும் இருந்து வருகிறார். தொல்லியல் ஆய்வு, கள ஆய்வுகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் சாதித்து வரும் அவரிடம் பேசியபோது:

time to read

1 min

October 26, 2025

Dinamani Virudhunagar

பாசப் பிணைப்புக்காக...

உடன்பிறந்தோரின் பாசப் பிணைப்பை உணர்த்தும் விதமாக, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கார்த்திகைப் பௌர்ணமியின்போது 'சாமா- சக்கேவா' (சாமா-சாம்பன்) விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. சமூக அக்கறையுடன் பாரம்பரியமிக்க கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பண்டிகையாகும்.

time to read

1 min

October 26, 2025

Dinamani Virudhunagar

தொன்மத்தின் சாயல் படிந்த பேய்!

மலையாள நகைச்சுவைத் திரைப்படங்களின் ருசி என்பது பத்தியச் சாப்பாடு மாதிரி. ஒரு வகையான பிரத்யேகச் சுவையில் இருக்கும். முகத்தில் அடிக்கும் மசாலாவோ, வயிற்றைக் கெடுக்கும் காரமோ அதில் இருக்காது. அமுங்கிய குரலில் மெலிதாக வெளிப்படும் இந்த நகைச்சுவையை நுகர்வதற்குத் தனி ரசனை வேண்டும். இந்த வகையான நகைச்சுவைப் படங்கள், டப்பிங் வடிவில் அல்லது ரீமேக் வழியில் தமிழுக்கு நிறைய வந்திருக்கின்றன. காமெடியும் சென்டிமென்ட்டும் கச்சிதமான கலவையில் அமைந்திருக்கும் இவ்வகையான திரைப்படங்களை உருவாக்க இப்போது இயக்குநர்களே இல்லை. அந்தக் குறையை தீர்க்க ஒரு கதை எழுதினேன். அதில் கொஞ்சம் திகில் பாணி திரை வடிவத்தைக் கொடுத்தேன். அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாகக் கொடுப்பதில் நிறைய சவால். அதுதான் இந்தப் படம். நம்பிக்கையாகப் பேசுகிறார் சிற்பி எம். மாதேஷ் 'டம்ளர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

time to read

2 mins

October 26, 2025

Dinamani Virudhunagar

பாட்டிகள் படிக்கும் பள்ளி

பள்ளி என்றால் சிறுவர், சிறுமிகள்தான் படிப்பார்கள் என்பதில்லை. இளம்வயதில் படிக்க வாய்ப்புக் கிடைக்காத 'கை நாட்டுப் பெண்களும், மூதாட்டிகளும் முறைசாரா பள்ளியில் சேர்ந்து படிக்கலாம்.

time to read

1 mins

October 26, 2025

Translate

Share

-
+

Change font size