Facebook Pixel எந்நன்றி கொன்றார்க்கும்... | Dinamani Tirunelveli – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

எந்நன்றி கொன்றார்க்கும்...

Dinamani Tirunelveli

|

April 17, 2025

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

மனிதனின் உயர்ந்த பண்புகளாக சான்றோர்களால் குறிப்பிடப்படுவது, நேர்மை, சகிப்புத்தன்மை, பொறுமை, பணிவு, மனிதநேயம், இன்சொல் பேசல், கருணை, இரக்கம், புறங்கூறாமை, நன்றியுணர்வு ஆகியவை. இதில், நன்றியுணர்வு என்பது வேகமான காலஓட்டத்தில் நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒரு பண்பாக மாறிவிட்டது.

தினையளவு நன்மை கிடைத்தாலும், அதனால் தாம் பெற்ற பயனை உணர்ந்து, அதனை பனையளவாக நினைத்து நன்றி பகர்வது நல்லடியார்களின் நன்னெறியாகும். ஒருவர் பிறருக்கு செய்யும் நல்ல செயல்கள் என்றும் நன்மை பயக்கும். இத்தகைய நல்ல செயல்களே 'நன்று' என்பதாகும். 'நன்று' என்ற சொல்லின் அடிப்படையிலேயே 'நன்றி' என்ற சொல்லும் பிறக்கிறது.

'நன்றி' உரைத்தல் என்பது மனிதகுலம் கண்ணியமாய் மண்ணகத்தில் வாழ்வதற்கு நனி சிறந்த நடைமுறைப் பண்பாகும். இப்பண்பானது நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக, ஒருவரின் பண்பட்ட தன்மையை எடுத்துக்காட்டும்.

நம் வாழ்வு உயர, நன்மைகள் பல செய்த நல்லவர்களை நம் மனதில் கல்வெட்டு எழுத்துகளாய் பதிந்து வைத்துக் கொண்டு, நேரம் வரும்போதெல்லாம் அவரின் அச் செய்கைகளை பிறர் அறியும் வண்ணம் பாராட்டி உரைக்க வேண்டும். அது அவருக்கு பெரிய ஊக்க சக்தியாக இருந்து, பிறர் மகிழ்ச்சியடைய இன்னும் பல நற்காரியங்களைப் புரிவார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tirunelveli

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tirunelveli

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளான காங்கோ, உகாண்டா ஆகியவற்றில் எபோலா வைரஸ் தொற்று பரவுவதை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Tirunelveli

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் அருகே விமான நிலையம் குத்தகை

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் மத்தள ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கையின் நடவடிக்கையை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size