Versuchen GOLD - Frei
தாய் மண்ணே வணக்கம்!
Dinamani Ramanathapuram & Sivagangai
|December 09, 2025
சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'.
வங்க மொழி கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875-இல் எழுதிய 'ஆனந்த மடம்' என்ற நாவலில், 'வந்தே மாதரம்' பாடல் இடம்பெற்றது.நம் தாய்த்திரு நாடான இந்தியாவை ஒரு தாயாக நினைத்து, அதன் இயற்கை வளங்கள், பழைமையான கலாசாரம், ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை வீரியமிக்க கவிதை வரிகளில் பங்கிம் சந்திர சட்டர்ஜி வடித்திருந்தார். அதனால், இந்தப் பாடலும், 'வந்தே மாதரம்' என்ற சொல்லும் இந்தியர்களின் மனதை ஆட்கொண்டது.
இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் கால் வைத்ததுமுதல் அவர்களை விரட்டுவதற்கான போராட்டம் என்பது நடந்து கொண்டேதான் இருந்தது. சுதந்திரப் போராட்டம் என்பது எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லாமல், தனித்தனியாக நடந்து வந்தது. ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்குத் தெரிந்த வகையில், மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருந்தனர்.
ஆனால், 1875-இல் இயற்றப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல் மெல்ல மெல்ல மக்களைச் சென்றடைந்து, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்தது. பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தனது சுட்டெரிக்கும் கவிதைகளால், தமிழ் நாட்டில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய மகாகவி பாரதியார், 1905-ஆம் ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
வந்தே மாதரம் பாடலின் எழுச்சிதான் ஆங்கிலேயர்களை விரட்டியடித்து; சுதந்திர இந்தியாவை உருவாக்க ஓர் இயக்கத்தை உருவாக்க தூண்டுகோலாக அமைந்தது.
1885-இல் 'சுதந்திரம்' என்ற ஒற்றை நோக்கத்துக்காக 'இந்திய தேசிய காங்கிரஸ்' தொடங்கப்பட்டது. 1896-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், 'வந்தே மாதரம்' பாடலை உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார்.
Diese Geschichte stammt aus der December 09, 2025-Ausgabe von Dinamani Ramanathapuram & Sivagangai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.
1 min
May 28, 2026
Listen
Translate
Change font size

