நாங்களும் மனிதர்கள்தான்!
Dinamani Puducherry
|December 18, 2025
மனித வரலாற்றின் தொடக்கம்முதல் புலம்பெயர்வு வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இயற்கை, பஞ்சம், பேரழிவுகள், அரசியல் அடக்குமுறை, வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு இதுபோன்ற பல காரணங்களால், மனிதர்கள் தங்களுடைய சொந்த மண்ணையும், நிலத்தையும் விட்டு புலம்பெயர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.தங்கள் தாய் நாட்டையும், உரிமைகளையும் விட்டு வெளியேறும் மனிதர்கள் அங்கே சந்திக்கும் வாழ்க்கைச் சூழல் மிகவும் வேதனையும் கொடுமையுமானது. புலம்பெயர்வு என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது மனிதர்களின் அடையாளம், உரிமை, மரியாதை, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் இழக்கக்கூடிய கடினமான அனுபவமாகும்.
மொழி, இனம், ஜாதி எனப் பல்வேறு அடையாளங்களுடன் கூடி வாழும் ஒரு தேசத்தில், ஒருவர் ராஜ்ஜியத்துடன் ஆள்வதும், மற்றொருவரை நாட்டை விட்டு விரட்டுவதும் சில நாடுகளில் தொடர்கதையாக உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரம் இல்லாமல், போர் ஏற்பட்டால் பயத்துடன் சொந்த நாட்டை விட்டு மக்கள் புலம்பெயர்ந்து விடுகின்றனர். இவ்வாறு சென்றவர்கள் 'அகதிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி அமர்த்தப்பட்ட இடங்கள் 'முகாம்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
தாய் நாடு, தாய் மொழி, குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், கலாசாரம் ஆகிய அனைத்திலிருந்தும் பிரிந்து வாழ வேண்டிய நிலை மனிதனைத் தனிமைப்படுத்துகிறது. இதனால் மன தில் பயம், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும், மிகுந்த மன அழுத்தம் நிறைந்ததாகவும் பல்வேறு சிரமங்களுடன் வாழ வேண்டி உள்ளது.
Diese Geschichte stammt aus der December 18, 2025-Ausgabe von Dinamani Puducherry.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry
Dinamani Puducherry
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Puducherry
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Puducherry
மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
1 min
December 20, 2025
Dinamani Puducherry
பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
1 mins
December 20, 2025
Dinamani Puducherry
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Puducherry
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Puducherry
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Puducherry
கரூர் சம்பவம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Puducherry
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Puducherry
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Listen
Translate
Change font size

