மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை
Dinamani Karur
|September 03, 2025
சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.
தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் கல்வியை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆவணம் என்று கூறப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை இந்தக் கொள்கை உள்ளடக்கியது. முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசும், இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசும், மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அரசும் கொண்டு வந்தன.
மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் ஒரு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களைப் புறக்கணித்து விட்டு, கல்வியாளர்கள் என்ற பெயரில் கட்சி ஆதரவாளர்களை வைத்து கல்விக் கொள்கை வகுக்கப்படுகிறது. அவர்களது அரசியல் கொள்கைகள் கல்விக் கொள்கைகளாகத் திணிக்கப்படுகின்றன.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, அவசர அவசரமாக இந்திரா காந்தி தமது அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவந்தார். அது இப்போது பாஜக ஆட்சிக்கும் வசதியாகப் போய்விட்டது. அவசர நிலைக் காலத்தைக் கேலி பேசும் பிரதமர் மோடி பறிக்கப்பட்ட கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கு வழங்குவாரா?
மத்திய, மாநில அரசுகளிடம் சிக்கித் தவிக்கும் கல்வியின் வரலாறு மிகவும் பெரியது. 1947-ஆம் ஆண்டு தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கல்வியறிவு இல்லாமையைப் போக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி நிதியுதவி செய்தது.
இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் அபுல்கலாம் ஆசாத், நாடு முழுவதும் கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார். மத்திய அரசு இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் திட்டங்களை உருவாக்கியது. பல்கலைக்கழக கல்வி ஆணையம் (1948-1949) இடைநிலைக் கல்வி ஆணையம் (1952-1953), பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் கோத்தாரி ஆணையம் (1964-66) ஆகியவற்றை நிறுவியது.
Diese Geschichte stammt aus der September 03, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Karur
காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Karur
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Karur
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Karur
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Karur
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Karur
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min
January 04, 2026
Dinamani Karur
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Karur
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Karur
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Translate
Change font size
