Versuchen GOLD - Frei
தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!
Dinamani Dharmapuri
|March 25, 2025
அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.
தமிழகத்தினுடைய நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்கிற வகையில், நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கி இருக்கிறது. இதனால் 2025-26-ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் 70 ஆயிரத்து 753 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டியதிருக்கும். இவ்வாறாகக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது ஒவ்வொரு தனிநபர் மீதும் 1.25 லட்சம் ரூபாய் கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கும்.
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இவைதானோ? ஒவ்வொரு தனிநபரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் கடனைத்தான் இவ்வாறாகத் தமிழக அரசு பெருமை பொங்கப் பேசுகிறதோ?
நான்காண்டுகளாக மடிக்கணினித் திட்டம் நிறுத்தப்பட்டு தற்போது அதற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இனி 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அல்லது கைக்கணினிகள் வழங்கப்படும் என்று சொல்வது தேர்தலுக்கான நோக்கமாக இருக்குமே தவிர, வேறு எதுவாக இருக்க முடியும்? பந்தி முடிந்த பிறகு பசியாற வந்த விருந்தாளியைப் போல, சந்தை முடிந்த பிறகு சரக்கு வாங்க வந்த வியாபாரியைப் போல, தேரோட்டம் முடிந்த பிறகு, திருவிழாவைக் காண வந்த பக்தனைப் போல, வாக்குப்பதிவு முடிந்து விட்ட பிறகு வாக்களிக்க வந்த வாக்காளனைப் போல, நோயாளி மடிந்து விட்ட பிறகு, மருந்து வாங்கி வந்த உறவினரைப் போல, யாது செய்வது, எதைச் செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படுகிற திட்டமாக இவை சொல்லப்படுகிறது. ஆனால், திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்குவது சாத்தியமில்லை என்பதே உண்மையாகும்.
பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2,562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. போதிய நிதியும் ஆசிரியரும் இல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்களை உலகத் தரத்துக்கு மாற்றவா முடியும்? உள்ளூர் தரத்தையே அவர்கள் பெற இயலாமல் போகும்.
Diese Geschichte stammt aus der March 25, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Dinamani Dharmapuri
‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 26% உயர்வு
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
பொங்கல்: சென்னையிலிருந்து இதுவரை 15 லட்சம் பேர் பயணம்
பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!
மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
3 mins
January 13, 2026
Dinamani Dharmapuri
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
3 mins
January 12, 2026
Translate
Change font size
