Versuchen GOLD - Frei
இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?
Dinamani Chennai
|September 09, 2025
பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்த சூதாட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளர்கள், நடிப்பவர்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், சூதாட்டம் என்னும் கேடால் வரும் துன்பங்களை மையமாகக் கொண்டது மட்டுமல்ல; அதில் வரும் உபகதையான நளன் சரித்திரம் சூதாட்டத்தால் நளச் சக்கரவர்த்தியின் குடும்பம் அடைந்த இன்னல்களை விவரிக்கிறது.
திருக்குறள் பொருட்பால் அதிகாரம் 94-க்கு 'சூது' என தலைப்பிட்டு சூதாட்டம் தரும் இன்னல்களைப் பற்றி திருவள்ளுவர் விளக்குகிறார். சூதில் பெறும் வெற்றி, தூண்டில் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியதைப் போன்றதாகும் என்று எச்சரிக்கிறார். வெற்றி பெறுவது ஆயினும், சூதாட்ட களத்துக்குப் போகக் கூடாது என வள்ளுவர் அபாய சங்கை ஊதுகிறார்.
1968-1971-ஆண்டுகளில் சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி மாணவனாக நான் இருந்தபோது, மாணவர் சமுதாயப் பணி அமைப்பின் மூலமாக கிண்டி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குதிரைப் பந்தயம் நடக்கும் நாள்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளைப் பிடிக்கும் பணியில் நான் சந்தித்த அனுபவங்கள் என்னைத் திடுக்கிட வைத்தன.
'ஜாக்பாட்' டிக்கெட் வாங்க, ஆயிரக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பயணி, ஐந்து ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சார ரயிலில் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வாங்கியிருக்கமாட்டார். பிடித்து அபராதம் போட்டால், தன்னுடைய ஜாக்பாட் காம்பினேஷனுக்கு பணம் குறைகிறது என வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு குற்ற உணர்வு இல்லாமல் விட்டுவிடும்படி கெஞ்சுவார்.
ஓடும் குதிரையின் மூலமாக தனியார் முதலாளிக்கு போகும் பணம், ஓடும் ரயில் மூலமாக நாட்டுக்குப் போகட்டும்; இரண்டும் ஓடத்தான் செய்கின்றன எனக் கறாராகச் சொல்லி அபராதம் வசூலிப்பேன். காலையில் உற்சாகமாக சென்றவர்கள், பந்தயத்தில் பணத்தை இழந்து, குதிரையையும், குதிரை ஓட்டுபவனையும் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு வருவதும், சூது குறித்து காலம் எனக்குக் கற்பித்த பாடம்.
சரித்திரம் என்பது திரும்பத் திரும்ப வரும் ஒரே விஷயம் என்பார்கள். தாயக்கட்டையாக உருவான சூது, சீட்டு கட்டு வழியாக குதிரைப் பந்தயமாக உருமாறி, அரசே நடத்தும் லாட்டரி சீட்டாக நிறம் மாறி, இன்றைய நவீன யுகத்தில் இணையவழி சூதாட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.
Diese Geschichte stammt aus der September 09, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
செப்.6-இல் குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 23: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் செப்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என் பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
பாகிஸ்தான் தலைவர்களுடன் ஈரான் அதிபர் சந்திப்பு
பிராந்திய அமைதி, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து ஆலோசனை
1 min
June 24, 2026
Dinamani Chennai
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை
சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்
தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு
1 min
June 24, 2026
Translate
Change font size
