Versuchen GOLD - Frei

உரிய நடைமுறையை பின்பற்றாமல் பெயர்கள் நீக்கப்படாது: தேர்தல் ஆணையம்

Dinamani Chennai

|

July 28, 2025

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து உரிய நடைமுறையை பின்பற்றாமல் எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்க முடியாவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோர் நீக்கப்படக் கூடும் என்று தீவிர திருத்தப் பணிகளுக்கு அக்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு: விசாரணை பிப்.16-க்கு ஒத்திவைப்பு

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை பிப்.16-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

time to read

1 min

February 06, 2026

Dinamani Chennai

டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரியில் புதுயுகத் தொழில்முனைவு பயிலரங்கம்

அரும்பாக்கம் டி. ஜி. வைணவக் கல்லூரியின் (தன்னாட்சி) முதுகலை தரவு அறிவியல் துறை மற்றும் நிறுவனப் புதுமைக் குழுமம் (ஐஐசி) இணைந்து, 'மெகா பிரைன்பூட் டிடிஜிடிவிசி 26' (மெகா சிந்தனைகளின் களம்!

time to read

1 min

February 06, 2026

Dinamani Chennai

கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கார்ல் மார்க்ஸின் சிலையை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப்.6) திறந்து வைக்கவுள்ளார்.கார்ல் மார்க்ஸின் பொருளாதார சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறியும் வகையில், அவருக்கு சென்னையில் புதிதாக சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

time to read

1 min

February 06, 2026

Dinamani Chennai

பிப். 9 முதல் பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு

பெங்களூரில் மெட்ரோ ரயில் கட்டணம் பிப்.9 ஆம்தேதி முதல் உயர்த்தப்படுகிறது.மெட்ரோ ரயில்வே கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரையின்படி புதிய கட்டணம் திங்கள்கிழமை (பிப். 9) முதல் அமலுக்கு வருகிறது.

time to read

1 min

February 06, 2026

Dinamani Chennai

பிப்.11-இல் தமிழகம் வருகிறார் துணை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறி விக்கப்படவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு வரும் பிப்.11-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.நிகழாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்க ளில் நடைபெறவுள்ளது.

time to read

1 min

February 06, 2026

Dinamani Chennai

பிகார் தேர்தலில் ரூ.40,000 கோடி செலவிட்டது பாஜக கூட்டணி: பேரவையில் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகார் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிக்க பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ரூ.40,000 கோடி செலவிட்டது என்று சட்டப்பேரவையில் ஆர்ஜேடி செயல் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

February 06, 2026

Dinamani Chennai

ரூ.34,237 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.34,237.39 கோடி முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

February 06, 2026

Dinamani Chennai

இன்றுமுதல் விருப்ப மனுக்கள் விநியோகம்: தேமுதிக அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் 264 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர், வெள்ளிக்கிழமை (பிப்.6) முதல் பிப். 12 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:

time to read

1 min

February 06, 2026

Dinamani Chennai

அடுத்தவர் வீட்டை குத்தகைவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது

புரசைவாக்கத்தில் அடுத்தவர் வீட்டை குத்தகைக்குவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

time to read

2 mins

February 06, 2026

Dinamani Chennai

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: பிப். 9-இல் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் திங்கள்கிழமை (பிப்.9) முதல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

February 06, 2026

Translate

Share

-
+

Change font size