Versuchen GOLD - Frei

அரிய பண்புகளின் தலைமகன்

Dinamani Chennai

|

July 15, 2025

காமராஜ் அதிகார ஆணவமோ, பதவி மோகமோ இல்லாத எளிய, இனிய மனிதர்; தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஓயாது உழைத்தவர்; ஆகவேதான், மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார்.

- முனைவர் அ.பிச்சை

வொஹர்லால் நேரு 1964-இல் நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டம். அப்போது, மேலைநாட்டுப் பத்திரிகையாளர்களில் சிலர், நேருவுக்குப் பிறகு இந்தியா சிதறுண்டு போகும் என்றார்கள்; ஆனால், வேறு சிலர் இந்தியா சிதறாமல் நிற்கலாம் என்றாலும், அங்கு ஜனநாயகம் நீடிக்க வாய்ப்புகள் குறைவு என்று ஆரூடம் கூறினர்.

அதைப் பொய்யாக்கி, இந்தியாவில் ஒற்றுமையையும், ஸ்திரத்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் உறுதி செய்ததில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர்களில், முதன்மையானவராகக் குறிப்பிடப்பட வேண்டியவர் கு.காமராஜ். ஆனால், இன்று அவர் தமிழ்நாட்டைத் தவிர்த்து- தேசத்தின் பிற பகுதிகளில் மறக்கடிக்கப்பட்ட தலைவராக ஆகிவிட்டாரே! என்று கவலையுடன் பதிவு செய்திருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜ் பதவி வகிக்கிறார். அது சமயம் நேரு தன் வீட்டில் நலிந்த நிலையில், ஓய்வு எடுத்து வருகிறார். அவரை காமராஜ் சந்திக்கிறார்.

‘ஐயா! எனக்கு உங்கள் அறிவுரை தேவை. உங்களுக்கு முழுமையான ஓய்வு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி நீங்கள் ஓய்வில் இருந்தால், உங்கள் பொறுப்பை நாங்கள் யாரிடம் கொடுப்பது? எனக் கேட்கிறார் காமராஜ். அதற்கு நேரு; ‘சாஸ்திரியை வைத்துப் பாருங்கள்’ என்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின்னால், ‘இந்திரா காந்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று காமராஜ் கேட்க, அதற்கு நேரு தந்த பதில்; ‘இப்போது வேண்டாம்’ என்பதாகும்.

அதன் பிறகு, சென்னை திரும்பிய காமராஜ், தன் நம்பிக்கைக்குரிய சகா வான சட்டப்பேரவைத் தலைவர் செல்ல பாண்டியனிடம் இந்த உரையாடலைப் பகிர்ந்து கொள்கிறார்.

அத்துடன் சேர்த்து, காமராஜ் பேரவைத் தலைவரிடம், “பாண்டியன்! இந்திரா காந்தியின் பெயரை நான் சொன்னவுடன், தலைவர் நேரு, ‘இப்போது வேண்டாம்’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘வேண்டாம்’ என்று சொல்லவில்லை! ஆகவே, நம் தலைவர் மனதில் இந்திரா காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது எனது ஊகம்’ என்றாராம்.

இவ்வாறு தன் தலைவனின் ஆழ்மனத்தில் கிடந்த எண்ணத்தை, தானே கேட்டறிந்து, அப்படியே முதலில் சாஸ்திரி, அடுத்து இந்திரா என்று நிறைவேற்றிக் காட்டிய தூய்மையான தேசத் தொண்டர் காமராஜ்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளைக் (கஞ்சா) கடத்தி வந்த மும்பையைச் சேர்ந்த ஆசிரியைகள் உள்பட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

உக்ரைன் போருக்குப் பிறகு ரூ.15.17 லட்சம் கோடிக்கு ரஷிய கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா!

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷிய கச்சா எண்ணெய்யை சுமார் 14,388 கோடி யூரோவிற்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15.17 லட்சம் கோடி) இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.7) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.13 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன.13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.9-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்

திமுக ஆட்சியில் ரூ.ரவியை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி புகார் தெரிவித்தார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஐஎஸ்எல் கால்பந்து தொடருக்கு புத்துயிர்: பிப். 14-இல் தொடக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் 2026 ஆட்டங்கள் வரும் பிப்.14 முதல் தொடங்கி நடைபெறும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Chennai

வளர்ச்சித் திட்டப் பணிகள்: பிப்.10-க்குள் முடிக்க உத்தரவு

சென்னையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் பிப்.10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் ஆர். பிரியா உத்தரவிட்டார்.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size