பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு
DINACHEITHI - NELLAI
|May 24, 2025
பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார். அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
-
மின்சாரத்துறை, தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கியமானது என்பதால், தமிழ்நாடு அரசின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) மானியமாக சுமார் ரூ. 53,000 கோடியும், இழப்பீட்டு நிதியாக ரூ. 52,000 கோடியும் ஒதுக்கி ஆதரவளித்துள்ளது. இது, தமிழ்நாடு அரசு, தனது மக்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சார விநியோகத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணுடன் (CPI) இணைக்கப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குத் தானியங்கி வருடாந்திரக் கட்டண உயர்வினைக் கொண்ட பல ஆண்டு கட்டண (Multi-Year Tariff) முறையை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய சீர்திருத்தமாக, சிறந்த செயல்பாட்டு மற்றும் நிதித் திறன்களை அடையும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (TANGEDCO) மறுசீரமைத்து, உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கென தனித்தனி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்பைக் குறைப்பதில் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் 19.47 சதவீதமாகயிருந்த இந்த இழப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த AT&C இழப்புக் குறைப்பானது, பெரிய அளவிலான நிதி சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் மின் கொள்முதல் மற்றும் வட்டிச் செலவினங்கள், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) நிதி நிலையில் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. இச்சவாலினை எதிர்கொள்ளும் வகையில், தேவை மதிப்பீடு மற்றும் அடுத்த நாள் மின் கொள்முதலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தினை இக்கழகம் திறம்படப் பயன்படுத்தி வருகிறது.
Diese Geschichte stammt aus der May 24, 2025-Ausgabe von DINACHEITHI - NELLAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - NELLAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - NELLAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
DINACHEITHI - NELLAI
முன்னாள் மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
விரிவாக்கம் திட்டத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
December 13, 2025
DINACHEITHI - NELLAI
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ .
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
ரஜினிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்
1 min
December 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் 3 நாட்கள் நீடிப்பு
19-ந் தேதி மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 12, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
December 11, 2025
Translate
Change font size

