Facebook Pixel எங்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத விழாவாக நடந்தது, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம் | DINACHEITHI - MADURAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

எங்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத விழாவாக நடந்தது, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்

DINACHEITHI - MADURAI

|

July 09, 2025

பொது மக்கள் பாராட்டு

திராவிட மாடல் அரசின் சட்டம் ஒழுங்கைப் பறைசாற்றும் ஒரு முத்திரை விழா, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்.

தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் திருமுருகப் பெருமானுக்குத் தமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் படை வீடுதிருச்செந்தூர் திருக்கோயில்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன், திருச்செந்தூர் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா 7.7.2025 திங்கள்கிழமை காலை 6.50 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த குடமுழுக்குவிழா தமிழ்நாடு அரசின் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு. அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தமிழ் மறைகள் முழங்கிட தருமபுர ஆதினம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சிருங்கேரி சாரதா பீடாதிபதி சாமிகள் முதலானோர் சூழ வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருச் செந்தூரின் கடலோரத்தில் கூடிய கூட்டம் தலையா, கடல் அலையா என ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் பல ஆண்டுகளாக முழங்கி வருவதை எவரும் மறந்திட முடியாது.

அந்த அளவுக்கு திருச்செந்தூர் கோயிலைச் சூழ்ந்த நாற்புறங்களிலும், கடலோரத்தில் மணலே தெரியாத அளவுக்கு இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி வழியாக குட முழுக்கு விழாவைப் பார்த்து மகிழ்ந்த மக்கள் அனைவரும் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

DINACHEITHI - MADURAI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - MADURAI

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - MADURAI

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - MADURAI

போர் தீவிரம் அடைகிறது- 51 பேர் பலி

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்

time to read

1 mins

March 01, 2026

DINACHEITHI - MADURAI

ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

March 01, 2026

Translate

Share

-
+

Change font size