Versuchen GOLD - Frei
ஒரே நாடு...ஒரே தேர்தல்...ப்ளஸ் & மைனஸ்!
Kungumam
|13-10-2023
‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமா?’ இப்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கும் ஒரே கேள்வி இதுதான். காரணம், சமீபத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவை அமைத்தது ஒன்றிய அரசு.
இந்நிலையில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தொடர்பான விவாதங்கள் இப்போது சூட்டைக் கிளப்பியிருக்கின்றன.
இப்படி ஓர் உயர்மட்டக்குழுவை ஒன்றிய அரசு அறிவித்ததுமே எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்நிலையில் இதிலுள்ள சாதக, பாதகங்களை பல்துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும் நிபுணர்களும் பேசியும் எழுதியும் தங்கள் கருத்தை ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு முதல் மக்களவைத் தேர்தல் 1952ம் ஆண்டு நடந்தது. அப்போது மக்களவைக்கு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றுபோல் தேர்தல்கள் நடந்தன. அதாவது, ஒரு நாடு ஒரே தேர்தலைச் சந்தித்தது. இது 1967ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
ஆனால், சில சட்டமன்றங்களின் ஆட்சிக்கலைப்பு உள்ளிட்ட விஷயங்களால் இந்த முறை மாறிப்போனது. 1959ம் ஆண்டு கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது அப்போதைய ஒன்றிய அரசு.
பின்னர் 1968 மற்றும் 1969ல் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன. மக்களவையும் 1970ல் கலைக்கப்பட்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற சுழற்சி வட்டம் உடைந்துபோனது.
இதன்பிறகு, இந்திய தேர்தல் ஆணையம் 1983ம் ஆண்டு மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படியான அமைப்பை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இதனையடுத்து பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1999ல் பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் ஒரே தேர்தல் என்பதை பரிந்துரைத்தது.
பிறகு, மீண்டும் பதினாறு ஆண்டுகள் கழித்து 2015ல் நாடாளுமன்ற நிலைக்குழு, ஒரே தேர்தல் பரிந்துரையை வலியுறுத்தியது. தொடர்ந்து 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, நீதிபதி சவுகான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் தேர்தல் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது.
Diese Geschichte stammt aus der 13-10-2023-Ausgabe von Kungumam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
