திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
July 16-31, 2025
|Aanmigam Palan
திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய கடற்கரைத் திருத்தலங்களைத் தொடர்ந்து கடல் நடுவே தீவாக அமைந்துள்ள இராமேஸ்வரம் பற்றி இங்கு காண்போம். இங்குள்ள உலகப்பிரசித்திபெற்ற இராமநாதசுவாமி கோயிலில் இறைவன் பர்வதவர்த்தினி எனப்படும் மலை வளர்காதலியுடன் வீற்றிருக்கிறார்.
வங்கக்கடலில் சுமார் 13,000 ஏக்கர் நில அளவில் அமைந்துள்ள அழகிய சிறுதீவான இராமேஸ்வரத்தில் 15 ஏக்கர் பரப்பில் காட்சி அளிக்கும் எழில் மிகு கோயில் இது.
இந்தியாவெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் கோயில். ஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலம்.
மூர்த்தியாக இரண்டு அடி உயரமுள்ள பாணலிங்கமாகக் காட்சி அளிக்கிறார். திரிகோணமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களால் கருவறை கட்டப்பட்டது என்பர். பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை கூரைக் கொட்டகையாக இருந்த சிவாலயம், பிற்காலத்தில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களாலும் தேவக்கோட்டை ஜமீந்தார்களாலும் திருப்பணி செய்யப்பட்டு பெரும் வளர்ச்சி அடைந்துவிட்டது. மூலவர் சந்நதி முன்பு கொடிமரமும், 22 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் உள்ள சுதையாலான பிரம்மாண்டமான நந்தியும் கண்களைக் கவர்கின்றன.
சிவ பக்தனான ராவணனை அழித்ததால், ஸ்ரீராமருக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்க, அவர் அகஸ்திய முனிவரின் ஆலோசனைப்படி, ராமேஸ்வரம் கடற்கரையில் லிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்ய விரும்பினார்.
இதற்காக உகந்த நேரம் குறித்து, அதற்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு ஆஞ்சநேயரைப் பணித்தார். ஆனால் ஆஞ்சநேயர் வரத் தாமதமானதால், சீதை விளையாட்டாக கடல் மணலில் பிடித்து வைத்த லிங்கத்தையே ராமர் வழிபட்டார். சிவனார் ராமநாத சுவாமி (ராமலிங்கேஸ்வரர்) என்று பெயர் பெற்றார்; தலம் இராமேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. இதனால் சந்நிதியில் பெருமாள் தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது.ஆஞ்சநேயர் பூஜைக்கான லிங்கம் எடுத்துக்கொண்டு வருகையில், நாரதர், "நீ பூஜை செய்வதற்கு ஒரு லிங்கம் வேண்டாமா?" என்று கேட்க, அவர் மீண்டும் சென்று ஒரு லிங்கம் கொண்டு வந்தமையால் தான் காலம் தாழ்ந்தது என்று குறிப்பிடுகிறார் உ.வே.சா அவர்கள்.
هذه القصة من طبعة July 16-31, 2025 من Aanmigam Palan.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Aanmigam Palan
Aanmigam Palan
இசைக்காகவே ஊத்துக்காடு
அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அம்மைநோய் நீக்கும் அம்மன்
வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.
1 min
July 16-31, 2025
Aanmigam Palan
நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்
தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்
\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வையத்து வாழ்வீர்காள்!
பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
கலக்கம் போக்குவாள் காளராத்ரி
துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!
நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்
தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!
நாகபஞ்சமி - ஜூலை 29,2025
3 mins
July 16-31, 2025
Translate
Change font size

