இப்படித் துறவு வாழ்க்கை மேற்கொள்வது என்பது வாழ்க்கையை வாழமுடியாமல், 'என்னடா வாழ்க்கை இது' என்று வெறுத்து, அதன்பிறகு வரு வது என்று நினைக்கிறோம். அது உண்மையல்ல; துறவு எனப்படுவது அனைத்தையும் துச்சம் என்று தூக்கி எறிவதல்ல. தன் வீடு; தன்னுடையது என்ற வட்டத்தைக் கடந்து உலகம் முழுமையும் விசாலக் கண்கொண்டு நேசிப்பது. சரி, உலகம் முழுமையையும் நேசிக்கும் துறை துறவு என் றால், ஏன் குடும்பத்தைத் துறக்க வேண்டும்? குடும்பம் என்ற சிறிய துளி, உலகம் என்ற பெரிய கடலுக்குள் அடக்கம்தானே! என்ற கேள்வி எழு கிறது. அப்படியெனில் குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே சாமியாராக இருக்கலாமே என்றால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
துறவிகள் என்போர் சகலருக்கும் சகலத்திற்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். தன் குடும்பம் என்று ஒன்று இருந் துவிட்டால், அங்கு ஒரு தலைப் பட்சம் என்பது தலைதூக்கும். முதலில் என் வீட்டிற்கு, பிறகு தான் நாட்டிற்கு என்ற சுயநலம் சுட்டெரிக்கும்.
இந்து சமயத்தைப் பொறுத்தமட்டில், வாழ்க் கையை நான்கு நிலைகளாகப் பகுத்துள்ளனர். முதல்நிலை பிரம்மச்சரியம், இரண்டாம் நிலை கிரகஸ்தலம், மூன்றாம் நிலை வானப்பிரஸ்தம், நான்காம் நிலை சந்நியாசம். இந்த சந்நியாசத் தைத்தான் தமிழில் துறவு என்கிறோம்.
முதல் மூன்று நிலைகளை முறையே நிறைவு செய்த பிறகுதான் நான்காம் நிலையாகிய துறவுடன் உறவுகொள்ளமுடியும். அதாவது, அனைத்தையும் ஆண்டு அனுபவித்த பின்னர் தான் சந்நியாசம் என்பது சாத்தியம். அப்போது தான் ஆசைக்கடல் வற்றியிருக்கும்.
ஆசைகளைக் கடத்தல்தானே ஆன்மிகத்தில் அவசியம். இவ்வளவு ஏன்? ஒரு கோயிலின் கருவ றைக்குள் சென்று இறைவனின் திருமேனியைத் தீண்டி பூஜை செய்ய வேண்டுமெனில் அந்த அர்ச் சகருக்குத் திருமணம் ஆகியிருக்க வேண்டும்.
அப்போதுதான் பெண் தெய்வங்களின் திருவு ருவத்தைத் தொடும்போது மனம் மாசுபடாமல் பேரின்பத்திலேயே திளைத்திருக்கும். அவ்வ கையில், துறவுக்கு அனைத்து ஆசைகளையும் கடந்து வருதல் அவசியம் என்பதால்தான், நான் காம் நிலையில் சந்நியாசம் வைக்கப்பட்டது. அவ் வாறெனில் சில திருமடங்களில் மூன்று நிலைக ளைக் கடந்துதான் சந்நியாசம் என்றில்லாமல், முதல்நிலையாகிய பிரம்மச்சரி யத்திலிருந்தே சந்நியாசமாகிய துறவு தொடங்கப்பட்டு விடுகி றதே என்ற கேள்வி எழுகிறது.
هذه القصة مأخوذة من طبعة January 16, 2024 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 16, 2024 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.