மாபெரும் கலா ரசிகனாக போற்றப்படும் இராஜசிம்மனின் (இரண்டாம் நரசிம்மவர்மன், பொ.ஆ. 700-729) கலைப் படைப்புக்களில் ஒன்றாகக்கருதப்படுகிறது. பல்லவர்களின் சிற்பத்திறமையை இவ்வுலகுக்கு எடுத்தியம்பும் உலகப்புகழ் பெற்ற பல குடைவரை கோயில்கள் இவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையே.
நகரின் மையப்பகுதியில் சுற்றிலும் வீடுகள் சூழ்ந்திருக்க, கருவறை, அர்த்த மண்டபம், 16 தூண்களைக் கொண்ட மகாமண்டப அமைப்புகளுடன் கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது இவ்வாலயம்.
பல மணற்கற்களான சிற்பங்கள் கால ஓட்டம், வானிலை காரணமாக அரிக்கப்பட்ட நிலையிலும், ஒவ்வொரு கலை ஆர்வலர்களின் கண்களுக்கும் விருந்தாக உள்ளன.
வெளிப்புறச் சுவர்களை கால சம்ஹார மூர்த்தி மேலே சிவலிங் கத்தை கட்டியணைத்தபடி மார்க்கண்டேயர், கங்காவ தாரண மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி, தட்சிணா மூர்த்தி, சிவனின் விருச்சிக கர்ணம், ஜலந்தரனை வதம் செய்த பின்னர் யோக நிலையில் வீற்றிருக்கும் சிவன், பிக்ஷாடனர், கொம்புடன் காட்சியளிக்கும் துவாரபாலகர்கள், சங்கும் சக்கரமும் ஏந்திய பேரழகு துர்க்கை, கணேசர் போன்ற புடைப்புச்சிற்பங் களும், அழகிய மகர, சித்ர தோரணங்களும், சுவர்களின் மூலைப்பகுதியில் நின்றநிலையில் பெரிய சிம்மயாளி உருவங்களும் அலங்கரிக்கின்றன.
பூத கணங்களின் உருவங்கள் மிகவும் சிதிலமடைந்து சற்று தெளிவின்றி காணப்படுகின்றன. சிதைந்திருந்தாலும் சில சிற்பங்களின் எழில் தோற்றமும், சிற்ப நேர்த்தியும் காண் போரைக்கவர்கின்றன.
லிங்க வடிவில் உள்ள சிவன், 'ம்ருத்யுஞ்சயேஸ்வரர்' /இறவாதீஸ்வரர்/ இறவாஸ்தானத்து இறைவன் என வணங்கப்படுகிறார். இறைவி ஸ்ரீகாமாட்சி. தொல்லியல் மரபுச்சின்னமாக விளங்கும் இவ்வாலயம், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
هذه القصة مأخوذة من طبعة July 01, 2023 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 01, 2023 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.