يحاول ذهب - حر
தென் ஆபிரிக்க வெள்ளையர்களை அதிகமாக வரவேற்கும் ட்ரம்ப்
May 18, 2025
|Virakesari Weekly
தென் ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு மீள்குடியேற்றத்துக்காக அகதிகளாகச் சென்ற வெள்ளையினத்தவர்களின் முதல் குழுவினரை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை (12) வரவேற்றது.
-
ஆப்ரிகானர்' எனும் மேற்படி வெள்ளையினத்தவர்கள், தென் ஆபிரிக்காவில் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுகிறார்.
59 பேர் கொண்ட மேற்படி குழுவினரை வாஷிங்டன் டி.சி. நகரின் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலார் கிறிஸ் லாண்டோ நேரில் வரவேற்றார்.
வெளிநாடுகளிலிருந்து புதிதாக அமெரிக்காவுக்கு குடியேறுபவர்கள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவராக டொனால்ட் ட்ரம்ப் காணப்படுகிறார். இரண்டாவது தடவையாக அவர் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆவணங்களற்ற குடியேற்றவாசிகளை பலவந்தமாக விமானங்களின் மூலம் நாடுகடத்த அவர் உத்தரவிட்டார்.
ஆனால், தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆப்ரிகானர்கள் எனும் வெள்ளையினத்தவர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அகதி அந்தஸ்து வழங்க முன்வந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை ஆப்ரிகானர்கள்
ஆப்ரிகானர்கள் (Afrikaners) எனப்படுபவர்கள் 1652 ஆம் ஆண்டின்பின் பிரதானமாக நெதர்லாந்திலிருந்து (ஒல்லாந்து) தென் ஆபிரிக்காவில் குடியேறியவர்களின் பரம்பரையைச் சேர்ந்த வெள்ளையினத்தவர்களில் ஒரு பகுதியினர். அவர்கள் டச்சு மொழியை அடிப்படையாகக் கொண்ட ஆப்ரிகன்ஸ் எனும் மொழியை பேசுபவர்கள். தென் ஆபிரிக்காவில் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் பெருமளவு நிலங்களையும் அரசியல், பொருளாதாரத்தையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
பிரித்தானிய குடியேற்றவாசிகளின் வாரிசுகளான ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவர்களும் தென் ஆபிரிக்காவில் உள்ளனர்.
தென் ஆபிரிக்க மக்கள் தொகையில் இருவகை வெள்ளையர்கள் சுமார் 20-25 சதவீதமாக இருந்தபோதிலும் பெரும்பான்மையான கறுப்பினத்தவர்களுக்கான உரிமைகளை நிராகரித்த, வெள்ளையர்களின் கொடூரமான நிறவெறி ஆட்சி, 1948 முதல் 1990களின் முற்பகுதி வரை நிலவியது. மேற்படி வெள்ளையர்களில் சுமார் 60 சதவீதமானோர் ஆப்ரிகானர்கள் தான். அவர்களே நிறவெறி ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தினர்.
هذه القصة من طبعة May 18, 2025 من Virakesari Weekly.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Weekly
Virakesari Weekly
மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு
வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு
1 min
August 24, 2025
Virakesari Weekly
ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
1 min
August 24, 2025
Virakesari Weekly
மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்
பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.
1 min
June 29, 2025
Virakesari Weekly
ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்
இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அடுத்த கட்ட சாணக்கியம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.
3 mins
June 29, 2025
Virakesari Weekly
ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்
நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
சிக்கிக் கொண்ட கடற்படை
இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.
2 mins
June 29, 2025
Virakesari Weekly
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்
இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி
பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.
1 min
June 29, 2025
Translate
Change font size

