يحاول ذهب - حر
“இனவெறி அரசியலை மீண்டும் அனுமதியோம்”
September 03, 2025
|Tamil Mirror
வடக்கிற்கு மீண்டும் உயிர் கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேவையான முடிவுகள் தயக்கமின்றி எடுக்கப்படும் என்பதுடன் இனவெறி அரசியலை மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
-
இங்குள்ளவர்களின் வாழ்க்கையில் பெரும் பகுதி போருடன் கழிந்தது. முப்பது வருடங்களாக நாம் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையுடனும் சந்தேகத்துடனும் போராடினோம். அது நம் நாட்டில் நடந்த ஒரு பெரிய சோகம். இதன் காரணமாக, நம் நாட்டு மக்கள் அந்நியப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, இனவெறி அரசியல் தோன்றியது.
வடக்கு மற்றும் தெற்கில் அதிகாரத்தைப் பெறுவதற்கு இனவெறி முக்கிய கருவியாக மாறியது. அந்த நிலைமை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நாட்டில் இனவெறி அரசியலை மீண்டும் அனுமதிக்க மாட்டோம். மக்களாகிய நீங்கள் இந்த இனவெறி அரசியலை நிராகரிக்க வேண்டும் என்றும் நான் நம்புகிறேன். ஒற்றுமையை உருவாக்குவதே எங்கள் அரசாங்கத்தின் நோக்கம். சர்ச்சைக்கு வழிவகுக்கும் முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் பயப்படவில்லை. மேலும், பழைய அழிவுகரமான இனவெறி சத்தங்கள் நாம் எடுக்கும் முற்போக்கான நடவடிக்கைகளை மாற்றியமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
உலக தேங்காய் தின கொண்டாட்டங்களுடன் இணைந்து புதுக்குடியிருப்பு நகரில் செவ்வாய்க்கிழமை(02) காலை தடைபெற்ற வடக்கு தேங்காய் முக்கோணத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒரு படி முன்னோக்கி காலை வைத்த மக்களின் வெற்றிக்காக வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு மக்களின் நில உரிமைகள், மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உ உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
هذه القصة من طبعة September 03, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
