يحاول ذهب - حر
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
September 15, 2025
|Dinamani Tirunelveli
'முதலில் நாடு, கட்சி பிறகு' என்பதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. அது மட்டுமல்ல, பண்டித நேருவின் மறைவுக்கு திமுகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறந்தன. ஒரு வாரம் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசியல் நாகரிகத்துக்கு இது ஓர் உதாரணம்.
மக்களுக்காக அரசியல், அரசியலுக்காக மக்கள் அல்ல என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா. 'அடைந்தால் திராவிட நாடு இல்லையெனில் சுடுகாடு' எனச் சொல்லித்தான் திமுகவை அவர் வளர்த்தார்.
திமுகவின் வளர்ச்சியில் மிரண்டு போன காங்கிரஸ் அரசு, பிரிவினை பேசும் கட்சிகளைத் தடை செய்ய சட்டம் இயற்றியது. பிரிவினைவாதிகளைக் கைது செய்யவும் திட்டமிட்டது. இந்தச் சட்டம் திமுகவை தடை செய்ய என்பதை உணர்ந்த அண்ணா, மக்களுக்காகத்தான் அரசியல் என்ற உயர்ந்த கொள்கை பிடிப்பாளரான அவர், 'திராவிட நாடு உருவாவதற்கான காலம் கனியும் வரை எமது தரத்தை பலமுள்ளதாக உருவாக்குவேன்' என்று சொன்னார். அதனால்தான், சீனப் படையெடுப்பின்போது திராவிட நாடு கொள்கையை தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் போதும் எதிர்க்கும் போதும் கூட அவரது அரசியல் நாகரிகம் வெளிப்பட்டது. 'காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்கு முன்னரும் செய்த நல்லவை எதையும் நான் மறுக்கவும் இல்லை; எதிர்க்கவுமில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸையும் அதன் செயல்பாடுகளையும் தான் எதிர்க்கிறேன்' என்று சொன்னார் அண்ணா.
ஆகஸ்ட் 15-ஆம் தேதியை துக்க நாளாக பெரியார் அறிவித்தபோது அண்ணா அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 'இரண்டு நூற்றாண்டுகளாக இந்தத் துணைக்கண்டத்தின் மீது இருந்து வந்த பழிச்சொல்லை, இழிவை நீக்கும் அந்த நாள் திராவிடருக்கும் திருநாள், துக்க நாள் ஆகாது' என்று ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
هذه القصة من طبعة September 15, 2025 من Dinamani Tirunelveli.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli
அரையிறுதியில் ஜோகோவிச், வாசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 mins
October 10, 2025
Dinamani Tirunelveli
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025

Dinamani Tirunelveli
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Tirunelveli
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Tirunelveli
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வியாழக்கிழமை வென்றது.
1 min
October 10, 2025
Dinamani Tirunelveli
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Tirunelveli
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025
Dinamani Tirunelveli
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025

Dinamani Tirunelveli
ரூ.91 ஆயிரத்தைக் கடந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080-க்கு விற்பனையானது.
1 min
October 09, 2025
Translate
Change font size