يحاول ذهب - حر

வன்னியர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு

May 12, 2025

|

Dinamani Salem

வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

சென்னை, மே 11: வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சித்திரை பெருநிலவு வன்னியர் இளைஞர் மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தியாவில் ஓபிசி இடஒதுக்கீடு வர ஆனைமுத்தும், உயர்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு வர ராமதாஸும்தான் காரணம்.

வன்னியர்களை வாக்கு வங்கியாக ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் எம்பிசி பிரிவுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வன்னியர்களுக்கு சரியாக வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தான், கடந்த ஆட்சியில் அழுத்தம் கொடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் கொண்டுவந்தார்.

ஆனால், சூழ்ச்சியால் அது தடுக்கப்பட்டது. கள ஆய்வு செய்து வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செய்ய முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக இரண்டு ஆண்டுகளாக உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் ஏமாற்றிவிட்டார்.

கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதியில்லை என்றும், மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும் அவர் காரணம் கூறுகிறார். இது வன்னியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய துரோகம்.

சென்னை, மே 11: வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.

المزيد من القصص من Dinamani Salem

Dinamani Salem

நெருக்கடியை உருவாக்கும் காற்று மாசு!

எவ்வோர் ஆண்டும் வன்முறைகள், பயங்கரவாதம், தொற்று நோய்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றை விட இந்தியாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு பெரும் விவாதங்களையோ அரசு செயல்பாடுகளில் தாக்கங்களையோ இதுவரை ஏற்படுத்தவில்லை.

time to read

2 mins

January 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய வழக்கு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

போகோ - ஆண்ட்ரீவா பலப்பரீட்சை

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா - கனடாவின் விக்டோரியா போகோ ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துடன் சனிக்கிழமை மோதுகிறது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

மதவாத எதிர்ப்பு, மனிதநேய திட்டங்கள்: தமிழக மக்களுக்கு முதல்வர் நான்கு வாக்குறுதிகள்

திருவள்ளுவர் திருநாளையொட்டி, தமிழக மக்களுக்கு மதவாத எதிர்ப்பு, மனிதநேய திட்டங்கள், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

58 பேர் காயம்

time to read

1 mins

January 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

இறுதியில் விதர்பா - சௌராஷ்டிரா மோதல்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் கன்னடர்- தமிழர் ஒற்றுமையின் அடையாளங்கள்

திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் கன்னடர் - தமிழர் ஒற்றுமையின் அடையாளங்கள் என்று பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

சென்னையில் பிப். 10, 11-இல் 'சோர்ஸ் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின் 2026'

இந்தியாவின் மிக முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நிகழ்வுகளில் ஒன்றான 'சோர்ஸ் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின்' 2026-ஆம் ஆண்டுக்கான நிகழ்வு வரும் பிப்ரவரி 10, 11 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Salem

ஜீவாவின் சுவாசம் தமிழ்!

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது.

time to read

3 mins

January 17, 2026

Translate

Share

-
+

Change font size