இரட்டைப் பெருமை!
October 31, 2025
|Dinamani Pudukkottai
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
-
குரூப் சுற்றில் இந்திய ஆடவர் அணி வங்கதேசம் (83-19), இலங்கை (89-16), பாகிஸ்தான் (81-26), ஈரான் (46-29), பஹ்ரைன் (84-20), தாய்லாந்து (85-30) ஆகிய அணிகளையும், இந்திய மகளிர் அணி வங்கதேசம் (46-18), தாய்லாந்து (70-23), இலங்கை (73-10), ஈரான் (59-26) ஆகிய அணிகளையும் வீழ்த்தின. இறுதிச் சுற்றில் ஆடவர் அணி கடும் போட்டியை எதிர்கொண்டு ஈரானை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது என்றால், மகளிர் அணி 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை எளிதாக வெற்றி கண்டது.
தொடர் முழுவதும் ஐந்து போட்டிகளில் இந்திய மகளிர் அணி 89 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 312 புள்ளிகளைப் பெற்றது. இந்திய ஆடவர் அணி ஈரானைத் தவிர மற்ற ஐந்து அணிகளுக்கு எதிராக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. புள்ளிகள் வித்தியாசத்தைப் பார்த்தாலேயே இந்தப் போட்டியில் இந்திய அணிகளின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம்.
இந்திய ஆடவர் அணியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் இடம் பெற்றதும், மகளிர் அணியில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகா துணை கேப்டனாக விளையாடியதும் தமிழகத்துக்கு கிடைத்த தனிப்பட்ட பெருமை. இருவருமே சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இந்த இமாலய சாதனையை எட்டிப் பிடித்து, இளம் கபடி வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றனர்.
هذه القصة من طبعة October 31, 2025 من Dinamani Pudukkottai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Pudukkottai
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Pudukkottai
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Pudukkottai
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Pudukkottai
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 mins
January 03, 2026
Dinamani Pudukkottai
ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 02, 2026
Dinamani Pudukkottai
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Pudukkottai
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Pudukkottai
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Pudukkottai
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Listen
Translate
Change font size
