استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் பொறுப்பற்ற செயல்: ரஷியா, சீனா கண்டனம்

June 23, 2025

|

Dinamani Pudukkottai

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் பொறுப்பற்ற செயல் என்று ரஷியாவும், மேற்காசியாவில் நிலையை மேலும் மோசமாக்கும் என சீனாவும் கண்டனம் தெரிவித்தன.

மாஸ்கோ/பெய்ஜிங், ஜூன் 22:

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது: ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சர்வதேச விதிகள், ஐ.நா. பிரகடனம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் ஆகியவற்றை மீறிய சகித்துக் கொள்ள முடியாத நடவடிக்கை. ஒரு நாட்டின் இறையாண்மையை மீறி ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசுவது என்பது மிகவும் பொறுப்பற்ற செயல்பாடு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஒரு நாடு இத்தகைய செயலில் இறங்கியிருப்பது அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. இதுபோன்ற செயல்பாடுகளை அனைவரும் இணைந்து நிராகரிக்க வேண்டும். இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தாக்குதலால் அணுக்கதிர் வீச்சு அபாயம் வரை ஏற்படும். ஏற்கெனவே மிகவும் மோசமான தாக்குதல்களால் மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. இப்போது அந்த பிராத்தியத்துக்கு மட்டுமன்றி உலகின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவாகிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இதில் ஓரிடத்தில்கூட அமெரிக்காவின் பெயரை ரஷியா நேரடியாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘டிரம்ப்புடன் புதின் பேசமாட்டார்’: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சு நடத்தும் திட்டம் எதுவும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு இல்லை என்று ரஷிய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் இல்லமான கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோ இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அமெரிக்க அதிபருடன் புதின் பேச்சு நடத்தும் திட்டம் ஏதுமில்லை. தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்’ என்றார்.

المزيد من القصص من Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Pudukkottai

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

2 mins

October 30, 2025

Translate

Share

-
+

Change font size