Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

மனிதர்களைத் தெரிந்து கொள்கிற விந்தை!

November 09, 2025

|

Dinamani Namakkal

ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் பார்க்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதைப் பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. ஒரு நல்ல திரைக்கதைதான் சினிமாவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. அழுத்தமாகப் பேசத் தொடங்குகிறார், இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன். ஷாஜி கைலாஷ், சரவண சுப்பையா உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் சினிமா கற்றவர். இப்போது 'மதறாஸ் மாஃபியா கம்பெனி' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

- -ஜி.அசோக்

அதென்ன 'மதறாஸ் மாஃபியா கம்பெனி'?

கதைதான் இங்கே அதிமுக்கியம். தலைப்பு என்பது கவர்ந்திழுக்கும் மையம்தான். சென்னையில் அசைக்க முடியாத அளவுக்கு ரவுடியிசம் செய்து வரும் ஒருவரின் பின்னணிதான் கதை. கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என அந்த ரவுடியின் வாழ்க்கைதான் கதை. அதன் தாக்கம்தான் தலைப்பு. மற்றபடி இது முழுக்க முழுக்க ஒரு தாதாவின் கதை. அரசியலைவிட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம். நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படிச் சிலரை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை.

المزيد من القصص من Dinamani Namakkal

Dinamani Namakkal

மருத்துவப் பல்கலை.: பொறுப்பு துணைவேந்தர் புஷ்கலா

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யின் துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமியின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, மருத்துவப் பேராசிரியர் டாக்டர் புஷ்கலா அந்தப் பொறுப்பை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Namakkal

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம்

time to read

1 min

June 02, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மாநகராட்சிக் குடிநீர் சுத்தமில்லை எனப் புகார்: குழாய்த் தண்ணீரை குடித்த மேயர் பதிலடி!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சி மேயர் புஷ்யமித்ர பார்கவ், குழாய் தண்ணீரைக் குடித்து அதன் சுத்தத்தை நிரூபித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Namakkal

ஆர்டிஇ மாணவர்களின் பெற்றோருக்கு வருமான வரம்பை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஇ) சேர்க்கைப் பெறும் சமூக ரீதியில் பின் தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Namakkal

17 லட்சம் டன் யூரியா இறக்குமதி: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய 2- ஆவது சர்வதேச ஒப்பந்த தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Namakkal

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓர் இடத்துக்கான வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமை (ஜூன் 1) தொடங்கியது. இந்தத் தேர்தல் மூலம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Namakkal

உதிரிபாக விநியோக நிறுவனத்தில் தீ ஹூண்டாய் கார் உற்பத்தி பாதிப்பு

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய உதிரிபாக விநியோக நிறுவனமான 'மோபிஸ் இந்தியா' ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹூண்டாய் கார் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Namakkal

மாநில சீனியர் நீச்சல் போட்டி: 5 புதிய சாதனைகள்

சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியின் முதல் நாளில் 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

time to read

1 min

June 02, 2026

Dinamani Namakkal

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Namakkal

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Listen

Translate

Share

-
+

Change font size