يحاول ذهب - حر
மருத்துவர்களின் சேவை மகத்தானது!
July 01, 2025
|Dinamani Karur
மனித உயிர் காக்கும் மருத்துவர்களின் ஆயுள்காலம், மற்றவர்களை விட பதினான்கு ஆண்டுகள் குறைவு என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.
ஆம்! இந்தியாவில் ஒரு சராசரி நபரின் ஆயுள்காலம் 69லிருந்து 72 வயது வரையில் வரையறுக்கப்பட்டிருப்பது பலரும் அறிந்த ஒன்று. இந்திய மருத்துவர்களின் சராசரி ஆயுள்காலம் 55லிருந்து 59 வயது வரைதான். இதை ஒப்பிடும்போது, மற்றவர்களை விட பதினான்கு ஆண்டுகள் குறைவு. இது குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டிய நேரம் இது.
மருத்துவ ஆலோசனைக்காக வந்த இரு நோயாளிகள் ஒருவர் வங்கியில் வேலை செய்பவர், மற்றொருவர் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் கூறியவைதான், இவ்வாறு சிந்திக்க வைத்தது.
அந்த சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்டிடம், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று சொன்னபோது, என்னுடைய வாடிக்கையாளர்கள், என்னிடமிருந்து என் ஆரோக்கியத்தை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள், அதாவது, கடைசி நிமிஷத்தில் எல்லா வேலைகளையும் என்மீது சுமத்துவதால், ஓய்வின்றி உழைக்க வேண்டியுள்ளது. அதனால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றார் அவர்.
அப்போது தான் தெரிந்தது நாள் முழுவதும் நோயாளிகளின் பிணிகளைக் காது வழியே கேட்டு, அதை நீக்க உடலாலும் மனதாலும் தொடர்ந்து பாடுபடும் மருத்துவர்களின் நிலை என்ன?
வங்கியில் பணிபுரியும் மற்றொரு நோயாளி கூறுகையில் சிறு வயதிலிருந்து டாக்டர்கள் எல்லோருக்கும் இறப்பு என்பதே கிடையாது. அவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்களுக்கும் பிறரைப் போல் பிரச்னைகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் நோயாளிகளின் துயரைத் தீர்க்க வேண்டியிருப்பதால், சிலர் தம் குடும்பத்தைக் கூட கவனிக்க இயலாமல் தவிக்கின்றனர் என்றார்.
இவ்வாறு ஒவ்வொரு தனி நபரும் தம்மை நோயிலிருந்து காத்து நிற்கும் மருத்துவர்களின் நலன் குறித்து சிந்திக்கும் போதுதான், மருத்துவர்களின் ஆயுள்காலம் நீட்டிக்கப்படும். மருத்துவர்களாகிய நாம் மருத்துவ தினத்தன்று, இதைப் பற்றி சற்று சிந்திப்போம்?
மாணவப் பருவம், பயிற்சி மருத்துவர்கள், முதல் நிலை மருத்துவர்கள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் என்று, மருத்துவர்களின் காலவரையற்ற சேவை, மிக உன்னதமான சேவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. மக்கள் தொண்டே மகேசனுக்குச் செய்யப்படும் தொண்டாக பணிபுரியும் மருத்துவர்களின் நிலை மிகவும் வேதனைகலந்த ஒன்றாக மாறுகிறது.
هذه القصة من طبعة July 01, 2025 من Dinamani Karur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Karur
Dinamani Karur
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Dinamani Karur
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Karur
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Karur
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி
ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.
1 min
January 07, 2026
Dinamani Karur
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Karur
2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.
1 min
January 07, 2026
Dinamani Karur
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Karur
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Karur
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Karur
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Translate
Change font size
