The Perfect Holiday Gift Gift Now

நாயைக் கொல்லாத புலி!

July 01, 2025

|

Dinamani Karur

விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.

- முனைவர் இரா.கற்பகம்

சில நாள்களுக்கு முன்பு கேரளம் - தமிழ்நாடு எல்லையில், இடுக்கியில் உள்ள ஒரு ஏலக்காய் தோட்டத்தில், ஓர் ஆழமான குழியில் ஒரு புலியும் நாயும் விழுந்து கிடந்தன. பல மணிநேரம் கழித்துதான் வனத் துறையினர் வந்து அவற்றை மீட்டனர். நாயை வெளியில் விட்டபிறகு, புலியைப் பெரியார் புலிகள் காப்பகத்தில் கொண்டுவிட்டனர். இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் வந்து பலரது கவனத்தை ஈர்த்தது.

அவ்விரண்டு விலங்குகளும் வெகுநேரம் ஒரே குழியில் ஒன்றாகக் கிடந்திருக்கின்றன. இருந்தும், நாயை அந்தப் புலி கொன்று சாப்பிடவில்லை! பொதுவாக சிறுத்தை தான் நாயை வேட்டையாடி உண்ணுமே தவிர, நாயை புலி வேட்டையாடாது. ஏனெனில், நாய் புலியின் இயற்கையான இரை ஆகாது. மான், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளே புலியின் இயற்கையான இரையாகும். இரண்டு விலங்குகளுமே உயிர் பயத்தில் இருந்த போது, தப்புவது ஒன்றுதான் அவற்றின் தலையாய கவலையாய் இருந்திருக்குமேயன்றி, உணவைப் பற்றிய கவலை அப்போது இருந்திருக்காது.

விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. அதுவும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டே கொல்கின்றன. அந்தப் புலிக்குப் பசி வந்திருக்கலாம்; இருந்தாலும், தன்னுடன் சிக்கிக்கொண்டு, உயிர் பயத்துடன் இருந்த அந்த நாயின் மீது கருணை கொண்டு, அதை ஒன்றும் செய்யாமல் விட்டது. அந்த நாயும் புலியின் கருணையை உணர்ந்து செவ்வனே இருந்தது. ஐந்தாம் அறிவைத் தாண்டி அவை இரண்டும் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றனவோ எனத் தோன்றுகிறது!

மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. ஆனால், வயிற்றுப் பசி, உடற்பசி, கோபம், ஆணவம், பழிவாங்குதல் என்று ஏதேதோ காரணங்களுக்காகக் கொலை, கொள்ளை போன்ற மகாபாதகச் செயல்களைச் செய்கின்றார்களே! தம் ஆறாம் அறிவைக் கொண்டு இத்தகைய துர்க்குணங்களை விட்டொழிப்பதை விட்டுவிட்டு, இயற்கையின் நியதிக்கு மாறான, எண்ணிப் பார்க்கவும் அஞ்சத்தக்க கொடிய செயல்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களே!

விலங்குகள் திட்டம் வகுத்துக் கொலை செய்வதில்லை. பசிக்கும்போது தன்னை விடச் சிறிய விலங்கை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், மனிதர்கள் சாதுர்யமாகப் பலநாள் திட்டம் வகுத்துக் கொல்கின்றனர்.

المزيد من القصص من Dinamani Karur

Dinamani Karur

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Karur

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Karur

உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் மீண்டும் இயக்கம்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

அரசின் கடனும் மக்களின் கடனே!

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

Dinamani Karur

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Translate

Share

-
+

Change font size