يحاول ذهب - حر

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

October 29, 2025

|

Dinamani Dharmapuri

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

- முனைவர் கோ.விசுவநாதன்

அப்போதெல்லாம் திமுகவின் பொதுக் கூட்டம் இரண்டு வகையாக இருக்கும். சாதாரண பொதுக்கூட்டம், சிறப்புப் பொதுக்கூட்டம் என்று வகைப்படுத்தப்படும். சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். சிறப்புக் கூட்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்களுக்கு ஒரு ரூபாய்; பெண்களுக்கு எட்டணா. அந்தக் காலத்தில் பெண்களையும் அரசியல் கூட்டங்களுக்கு அழைக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளின் மேடைப்பேச்சு இருந்தது. அவர்கள் பெண்களுக்காகவும் பேசினார்கள். தினந்தோறும் அண்ணாவும் மூத்த தலைவர்களும் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.

இப்போது பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள், விளம்பர விளக்குகள், இதுதவிர கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை கூட்டத்தை நடத்துபவர் செய்துதர வேண்டும். இதேபோல், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரவேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் இந்த வசதி எல்லாம் செய்து தரவில்லை. அப்போது, கூட்டத்துக்கு வந்தவர்கள் தானாக வந்தவர்கள்தான். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் தரையில்தான் உட்காருவார்கள்.

அண்ணா கட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மாவட்டச் செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர் வரை எல்லோர் பெயரும் சொல்லி 'அவர்களே' என்று அழைத்து அதன்பின்தான் தமது உரையைத் தொடங்குவார். இதனால், அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளூரில் மதிப்பு மரியாதை கூடியது. சில பெயர் விடுபட்டுப் போனால் தமது உரையின் நடுவில் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். அண்ணாவின் இந்த அரசியல்பாணி பின்னாளில் எல்லா கட்சியினராலும் பின்பற்றப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

கட்சித் தொண்டர்களை 'தம்பிகளே' என்றுதான் அழைப்பார் அண்ணா. கட்சியில் குடும்ப பாசத்தை புகுத்திய புதுமையாளர் அண்ணா. அதன் பிறகு கருணாநிதி 'உடன்பிறப்பே' என்று அழைத்தார். எம்ஜிஆர் 'என் ரத்தத்தின் ரத்தமே' என்று அழைத்தார். இவையெல்லாம் தொண்டர்களிடையே இடைவெளி இல்லா நெருக்கத்தை அதிகரித்தது.

المزيد من القصص من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்

இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size