அமெரிக்காவில் மூன்றாவது கட்சி
July 17, 2025
|Dinamani Dharmapuri
இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது என்பது புதிதல்ல. மாதத்துக்கு 4 கட்சிகள் வீதம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து செயல்படாத கட்சிகளை ரத்து செய்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஓர் அம்சமாகத் திகழ்கிறது.
உலகின் மிகப் பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தொடங்கியுள்ள கட்சி அந்த நாட்டையும் தாண்டி பேசு பொருளாகியுள்ளது. ஏனெனில், அமெரிக்காவில் தனிநபர் ஒருவர் திடீரென அரசியல் கட்சியைத் தொடங்குவது என்பது மிகவும் அசாதாரண நிகழ்வு. அதுவும் யாருக்காக முழுமூச்சுடன் தேர்தல் பிரசாரம் செய்து அதிபர் பதவியில் அமரவைத்தாரோ, அதே டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளை விமர்சித்து 'அமெரிக்கா கட்சி' என்ற புதிய கட்சியை அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.
அமெரிக்காவை டிரம்ப் கடனில் தள்ளுகிறார் என்றும் அமெரிக்காவில் இப்போதுள்ள ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை ஜனநாயகமே அல்ல என்பதும் மஸ்கின் வாதம். அனைவரும் கட்சி தொடங்கிய பிறகுதான் பொதுமக்களிடம் வாக்கு கேட்டுச் செல்வார்கள். ஆனால், மஸ்க் கட்சி தொடங்குவதா, வேண்டாமா என்பதையே எக்ஸ் வலைதளத்தில் தன்னைப் பின்தொடர்வோரிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்தார். எலான் மஸ்கை எக்ஸ் வலைதளத்தில் 22 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்; இதில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் புதிய கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சியைத் தவிர வேறு பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிபராவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். அந்த அளவுக்கு அந்த இரு கட்சிகளும் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவ்விரு கட்சிகளின் சித்தாந்தங்களைத் தவிர வேறு எந்தக் கொள்கைகளும் அமெரிக்க மக்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை.
هذه القصة من طبعة July 17, 2025 من Dinamani Dharmapuri.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Dharmapuri
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Dharmapuri
துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை
கூடலூரை அடுத்துள்ள வடவயல் கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
1 min
January 01, 2026
Translate
Change font size
